ஐரோப்பிய நாடுகளில் தூதரகங்களை மூட திட்டமிடும் அமெரிக்கா... கூறப்படும் காரணம்
வரும் மாதங்களில் முக்கியமாக மேற்கு ஐரோப்பாவில் உள்ள பல தூதரகங்களை மூட அமெரிக்க வெளிவிவகாரத்துறை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க தூதரகங்கள்
உலகளவில் அமெரிக்காவின் ஊழியர்கள் எண்ணிக்கைகளைக் குறைக்கப் பார்க்கிறது என்றே பல அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வாஷிங்டனில் உள்ள அதன் தலைமையகத்தில் உள்ள பல நிபுணர் பணியகங்களை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் வெளிவிவகாரத்துறை ஆராய்ந்து வருகிறது.
அதில், மனித உரிமைகள், அகதிகள், உலகளாவிய குற்றவியல் நீதி, பெண்கள் பிரச்சினைகள் மற்றும் மனித கடத்தலை எதிர்ப்பதற்கான முயற்சிகள் போன்ற பணியிடங்கள் இதில் அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது கோடீஸ்வர உதவியாளர் எலோன் மஸ்க் ஆகியோர் இணைந்து செலவுக் குறைப்பு முயற்சியை முன்னெடுப்பதால், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் அமெரிக்க மற்றும் உள்ளூர் ஊழியர்களை குறைந்தது 10% என குறைப்பது குறித்து ஆராயுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
மட்டுமின்றி, அவர் விசுவாசமற்றவர் என்று கருதுகிற அனைவரும் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றே தேர்தல் பரப்புரையின் போதும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
சீனாவும் ரஷ்யாவும்
ஆனால், உலக அளவில் அமெரிக்கா முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ட்ரம்ப் நிர்வாகம் கைவிடும் என்றால், அந்த வெற்றிடத்தை சீனாவும் ரஷ்யாவும் கைப்பற்றும் என்றே நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கின்றனர்.
ஆனால், அமெரிக்க அரசாங்கம் மிகப் பெரியது என்றும், அமெரிக்க வரி செலுத்துவோர் அளிக்கும் உதவி வீணான மற்றும் மோசடியான முறையில் செலவிடப்பட்டுள்ளதாகவும் ட்ரம்பும் மஸ்க்கும் விமர்சிக்கின்றனர்.
இந்த நிலையில், ஜேர்மனியில் Leipzig, Hamburg மற்றும் Dusseldorf ஆகிய நகரங்களும், பிரான்சில் Bordeaux மற்றும் Strasbourg ஆகிய நகரங்களிலும் இத்தாலியில் Florence பகுதியிலும் உள்ள தூதரகங்களை மூடவே அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |