சீனா, தைவான் போர் பதற்றம்...ஐந்தாண்டு போர் நிறுத்தம்: நிலைப்பாட்டை வெளியிட்ட மெக்சிகோ
சர்வதேச நாடுகள் தங்களது இராணுவ மற்றும் பொருளாதாரப் போர்களை தவிர்க்க, ஐந்தாண்டு போர் நிறுத்தத்தை ஏற்க வேண்டும் என மெக்சிகோவின் ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் முன்மொழிந்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர் மற்றும் சீனா தைவானிடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் என அடுத்தடுத்து முரண்பாடுகள் சர்வதேச நாடுகள் மத்தியில் பெருகி வருகின்றன.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கைகளின் போதே உணவு பொருள்கள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார சரிவு என பல்வேறு உலக நாடுகள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றன.
credit: EFE/J. Meléndez
இதற்கிடையில் தைவான் மற்றும் சீனா இடையே உருவாகி வரும் போர் பதற்றம் உலக நாடுகளை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் என்ற அபாயத்தை அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் சர்வதேச நாடுகள் ஐந்தாண்டு போர் நிறுத்ததிற்கு முன்வர வேண்டும் என மெக்சிகோவின் ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் முன்மொழிந்துள்ளார்.
சீனா தைவான் பிரச்சனையில் மெக்சிகோவின் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஆண்ட்ரெஸ் மானுவல், "எங்கள் நாட்டின் நிலைப்பாடு என்னவென்றால், போர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் இல்லை, பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தங்களைத் தேட வேண்டும்.
Reuters
மக்களை பாதிக்கும் நெருக்கடியை எதிர்கொள்ள குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் ஒப்பந்தத்தை சர்வதேச நாடுகள் ஒப்புக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
அத்துடன் "விஷயங்கள் அப்படியே இருக்கட்டும், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் நிறுத்தப்பட்டவுடன், உலக நாடுகள் வர்த்தகப் போரில் பந்தயம் கட்ட வேண்டாம், ஏனெனில் அது நம் அனைவரையும் பாதிக்கிறது" எனத் தெரிவித்தார்.
மேலும் இந்த ஐந்தாண்டு கால போர் நிறுத்தற்திற்குள், உலக நாடுகளின் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கலாம், வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம், ஏழைகளுக்கு சேவை செய்யலாம் மற்றும் வளர்ச்சிக்கு ஒத்துழைக்கலாம் என்று ஆண்ட்ரெஸ் மானுவல் தெரிவித்துள்ளார்.
AP, Chiang Ying-ying
கூடுதல் செய்திகளுக்கு: தைவானை அச்சுறுத்தும் சீனாவின் பிரம்மாண்ட போர் பயிற்சி: பரபரப்பு காட்சிகள்
ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கக்கூடிய இந்த முன்மொழிவை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை ஏற்கும்படி கேட்பது மிகையாகாது என்றும் தெரிவித்துள்ளார்.
"இது நல்லவர்கள் மற்றும் கெட்டவர்களைப் பற்றியது அல்ல... இது அரசாங்கங்கள் மற்றும் பொருளாதார குழுக்களின் நலன்களுக்கு மேலாக மக்களின் நலன்களை வைப்பது பற்றியது. இது கற்பனாவாதமாகத் தோன்றினாலும், இதுவே தேவை. வேறு வழியில்லை." என்று ஆண்ட்ரெஸ் மானுவல் தெரிவித்துள்ளார்.