விமான நிலையத்தில் அடித்துக் கொண்ட பயணிகள்: இணையத்தில் பரபரப்பை கிளப்பும் வீடியோ
சிகாகோ விமான நிலையத்தில் டஜன் கணக்கான விமான பயணிகள் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டு கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
சண்டையிட்டு கொண்ட பயணிகள்
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஓ'ஹேர் சர்வதேச விமான நிலையத்தில் (O'Hare International Airport) டஜன் கணக்கான பயணிகள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலையத்தில் பைகளை திரும்ப பெறும் இடத்திற்கு அருகே ஏற்பட்ட வாக்குவாதத்தில் 24 வயது பெண்மணி ஒருவர் தாக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சண்டை அரங்கேறி இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Brawl at Chicago O’Hare airport this morning pic.twitter.com/fsH6n3yABd
— Mr Bogus (@Mr_Bogus0007) May 23, 2023
இருவர் கைது
இந்த சம்பவத்தை தொடர்ந்து பெண்மணியை தாக்கிய 18 வயது இளைஞர் கிறிஸ்டோபர் ஹாம்ப்டன் மற்றும் 20 வயது டெம்ப்ரா ஹிக்ஸ் ஆகிய இருவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் தகவல்கள் எதையும் பொலிஸார் வெளியிடவில்லை.
இது தொடர்பாக சிகாகோ விமான துறை வெளியிட்ட அறிக்கையில், பயணிகள் பாதுகாப்பே சிகாகோ விமான துறையின் முதன்மையான நோக்கம், எனவே இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருடன் இணைந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளது.
skytrax