நைஜீரியாவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 117 ஆக உயர்வு!
நைஜீரியாவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியா வெள்ளம்
நைஜீரியாவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது. பலர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
இது குறித்து ஒரு உயர் அவசர நிலை அதிகாரி தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் 21 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த எண்ணிக்கை தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.
ஒரு அணை உடைந்ததே இந்த நெருக்கடிக்கு மேலும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் இது பரவலான வெள்ளப்பெருக்குக்கு வழிவகுத்துள்ளது.
நைஜர் மாநில அவசரநிலை மேலாண்மை அமைப்பின் தலைவர் இப்ராஹிம் ஹுசைனி, சுமார் 3,000 வீடுகள் இரண்டு சமூகங்களில் நீரில் மூழ்கியுள்ளன என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் அதிர்ச்சியூட்டும் காணொளிகள், குடியிருப்புப் பகுதிகள் வழியாக சக்தி வாய்ந்த வெள்ள நீர் பாய்ந்து செல்வதையும், வீடுகளின் கூரைகள் மட்டுமே கலங்கிய பழுப்பு நிற நீரோட்டத்திற்கு மேலே தெரிவதையும் அவை காட்டுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |