புளோரிடா ஏரியில் முதலை தாக்கியதில் பெண் பலி! விலங்கை பிடிக்கும் முயற்சி தீவிரம்!
மத்திய புளோரிடா ஏரியில் முதலை தாக்கியதில் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலை தாக்கி பெண் பலி
ஒர்லாண்டோவுக்கு தெற்கே உள்ள கிஸ்ஸிம்மி(Kissimmee) ஏரியில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, முதலை தாக்கியதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் (FWC) செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4 மணி அளவில் டைகர் க்ரீக் ஓடை ஏரியுடன் கலக்கும் இடத்திற்கு அருகே இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளது.
அந்த பெண் ஒரு சிறிய படகில் சென்றுகொண்டிருந்தபோது தண்ணீரில் விழுந்ததாகவும், பின்னர் அவர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. அவரது உடல் பின்னர் அருகிலேயே மீட்கப்பட்டது.

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 7 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி
போல்க் கவுண்டி ஷெரிப் அலுவலகம் முதலில் அந்த பெண் மூடிய கூண்டுடைய படகில் (kayak) மற்றொரு காயமடையாத நபருடன் இருந்ததாகக் தெரிவித்தது.
ஆனால், பின்னர் FWC செய்தித் தொடர்பாளர், பாதிக்கப்பட்டவர் திறந்த கூண்டுடைய படகில் இருந்ததாக நம்புவதாக தெளிவுபடுத்தினார்.
தாக்குதல் மற்றும் அதில் ஈடுபட்ட முதலை பற்றிய விவரங்களை புலனாய்வாளர்கள் இன்னும் வெளியிடவில்லை. தொந்தரவு செய்யும் முதலைகளை பிடிக்கும் ஒப்பந்ததாரர் ஒருவர் ஏரிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
தற்போது வரை, தாக்குதலில் ஈடுபட்ட விலங்கு பிடிபட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |