2024 இல் நிகழவிருக்கும் பேராபத்துகள் - பாபா வங்காவின் துல்லியமான கணிப்புகள்
நம்மில் பலருக்கு எதிர்காலத்தில் என்ன விடயங்கள் நடக்கவிருக்கின்றது என்று குறித்து ஆராய்வதில் அதிக விருப்பம் இருக்கும்.
2024 ஆம் ஆண்டு ஆரம்பமாகி நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. இந்த 4 மாதங்களில் பல விடயங்கள் நிகழ்ந்துள்ளன.
பலர் ஜாதகம், ஜோதிடம், டாரோட் போன்ற பல வழிகளில் எதிர்காலத்தை கணித்துக்கொள்கிறார்கள்.
இதில் கணிக்கப்படும் ஒவ்வொரு விடயங்களும் நிகழும் , அதுபோலவே ஒரு சில விடயங்களும் நிகழாமலும் இருக்கும்.
ஆனால் பாபா வாங்கா கூறிய பல விஷயங்கள் இன்று வரையில் நிகழந்துக்கொண்டே தான் இருகிறது.
இளவரசி டயானா இறப்பு முதல் இஸ்ரேல் - ஹமாஸ் போர் வரையில் அனைத்தையும் கணித்துள்ளார்.
அந்தவகையில் 2024 ஆம் ஆண்டு நிகழவிருக்கும் விடயங்கள் குறித்து பாபா வங்காவின் கணிப்புகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பாபா வங்காவின் 2024 கணிப்புகள்
2024 இல் இயற்கை சீற்றங்கள் மற்றும் தீவிர வானிலை மாற்றம் ஏற்படும் என கணித்துள்ளார்.
உலக வெப்ப அலைகளில் அதிர்வெண் 67 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உச்ச வெப்பநிலையானது 40 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டதை விட அதிகமாக இருக்கின்றது.
மேலும் 1979 முதல் 1983 வரையிலான உலகளாவிய வெப்ப அலைகளின் சராசரி காலம் 2016 முதல் 2020 வரை 8 நாட்களில் இருந்து 12 நாட்களாக அதிகரித்துள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதை 2024 ஆம் ஆண்டின் வெப்பநிலை முறியடிக்கும் எனவும் குறிப்பட்டப்பட்டுள்ளது.
பாபா வாங்க வாழ்ந்த காலத்தில் இருந்து இணையத்தளத்தின் வசதியானது இருந்து வருகிறது. அதன் போதே, சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்று கணித்துள்ளார். இது சர்வேதச ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.
உலகப் பொருளாதாரம் மாறும் எனவும் உலக நாடுகளிடையே அரசியலும் கடன் சுமைகளும் அதிகரிக்கும் என அவர் கணித்துள்ளார்.
ஐரோப்பாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வரும் எனவும் கூறியுள்ளார்.
அந்தவகையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஆகியவை தற்போது நிகழ்ந்து வருபவையாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |