அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் எதிர்காலம் இனி எப்படி இருக்கப் போகிறது தெரியுமா? பழிவாங்க துடிக்கும் ஈரான் அதிபரின் பேட்டி
அமெரிக்க அதிபராக உள்ள டிரம்ப்பின் எதிர்காலம் இனி சிறப்பாக இருக்கப் போவதில்லை என்று ஈரான் அதிபர் ரூஹானி வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஈரான் நாட்டின் இதயம் என்றழைக்கப்பட்ட, இராணுவத் தளபதி சுலைமானி, அமெரிக்க படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலினால் இந்த ஆண்டு கொல்லப்பட்டார்.
அவரின் மரணம் ஒட்டு மொத்த ஈரான் மக்களையும் கண்ணீர் சிந்த வைத்தது. அதுமட்டுமின்றி சுலைமானின் மரணத்திற்கு காரணமான, அமெரிக்காவையும், அதிபர் டிரம்ப்பையும் சாதரணமாக விடப்போவதில்லை என்று ஈரான் அப்போதே எச்சரித்தது.
இந்நிலையில், நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை சந்தித்துள்ளார். இதனால் அவர் வரும் ஜனவரி மாதம் 20-ஆம் திகதி தன்னுடைய பதவியை இழக்கிறார்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி, ஈரான் தனது வரலாற்றில் இரண்டு மனநலம் பாதித்தவர்களை சமாளிக்க வேண்டி இருந்தது. ஒருவர் சதாம் உசேன். மற்றொருவர் டொனால்ட் டிரம்ப்.
ஒருவர் இராணுவப் போரிலும், மற்றொருவர் பொருளாதாரப் போரிலும் ஈடுபட்டதாகத் தெரிவித்த ரூஹானி அமெரிக்க அதிபர் டிரம்பின் எதிர்காலம் இனி சிறப்பாக இருக்கப்போவதில்லை என கூறியுள்ளார்.
இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான பிரசாரத்திற்கு தலைமை தாங்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியில் இருந்து விலகியது குறித்து ஈரான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக டிசம்பர் மாதத் தொடக்கத்தில் ஹசன் ரூஹானி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
