Glock Pistol துப்பாக்கியை உருவாக்கிய கோடீஸ்வர தொழிலதிபர் காலமானார்
உலகப் புகழ்பெற்ற அரை தானியங்கி துப்பாக்கியான க்ளோக்கை உருவாக்கிய ஆஸ்திரிய (Austria) பொறியாளர் காஸ்டன் க்ளோக் (Gaston Glock) 94 வயதில் காலமானார்.
க்ளோக் கைத்துப்பாக்கிகள் (Glock handguns) உலகம் முழுவதும் காவல்துறை, இராணுவம் மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகள் கைகளில் காணப்படுகின்றன.
பில்லியனர் தொழிலதிபர் காஸ்டன் க்ளோக் மற்றும் அவரது குடும்பத்தினர் 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 1.1 பில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 35,764 கோடி) மதிப்புடையவர்கள் என்று Forbes தெரிவித்துள்ளது.
1963-ல் அவர் நிறுவிய Glock நிறுவனம் ஆரம்பத்தில் கதவு கீல்கள் மற்றும் சன்னல் திரைகளை மட்டும் கம்பிககளை தயாரித்தது.
1980-களில் ஆஸ்திரிய இராணுவம் ஒரு புதிய ஆயுதத்தைத் தேடத் தொடங்கியபோது, காஸ்டனின் வணிக வாழ்க்கை ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
தனது நிறுவனத்தின்மூலம் அவர் முதல் கைத்துப்பாக்கியான 'Glock 17' வடிவமைத்தார். 1982-ல், இந்த துப்பாக்கியை ஆஸ்திரிய இராணுவம் மற்றும் காவல்துறை பயன்படுத்தத் தொடங்கியது.
Glock Pistolகள் விரைவில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வெற்றி பெற்றன. பின்னர் Glock-ன் பல்வேறு பதிப்புகள் வெளியிடப்பட்டன. க்ளோக் துப்பாக்கிகள் திரைப்படங்களிலும் தோன்றின.
இதன்மூலம், Gaston Glock மிகப்பாரிய கோடீஸ்வரர் ஆனார்.
தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை, காஸ்டன் தனது முதல் மனைவியிடமிருந்து 2011-ல் பிரிந்தார். பின்னர் அவர் ஆர்வலர் கேத்தரின் ஷிகோப்பை மணந்தார். காஸ்டனுக்கு முதல் திருமணத்தில் மூன்று குழந்தைகள் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Glock handguns, Glock Pistol, Gaston Glock