ஹமாஸ் படைகளிடம் மகளைப் பறிகொடுத்த இஸ்ரேல் கோடீஸ்வரர்: அவர் சொன்ன அந்த வார்த்தை
இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலில் கோடீஸ்வரர் ஒருவரின் மகள் மற்றும் அவரது காதலன் கொல்லப்பட்ட நிலையில், போர் முடிவுக்கு வந்து விரைவில் அமைதி திரும்பும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் துப்பாக்கிதாரிகள்
அக்டோபர் 7ம் திகதி காஸா எல்லை அருகே Negev பாலைவனத்தில் முன்னெடுக்கப்பட்ட இசை விழாவுக்கு சென்றுள்ளார் 24 வயதான Danielle Waldman மற்றும் அவரது காதலர் Noam Shai.
Credit: Eyal Waldman
இவர்களுடன் காரில் இன்னொரு நண்பரும் பயணித்துள்ளார். இந்த நிலையில் தான் ஹமாஸ் துப்பாக்கிதாரிகள் இவர்கள் பயணித்த அந்த காரை தோட்டாக்களால் துளைத்துள்ளனர்.
இதில் Noam, Danielle மற்றும் இவர்களின் நண்பரும் கொல்லப்பட்டனர். சம்பவத்தன்று Negev பாலைவனத்தில் நடந்த இசை விழாவில் சுமார் 360 இஸ்ரேல் மக்கள் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அன்றைய நாள் சூரியன் மறைய, மொத்தமாக 1,200 இஸ்ரேல் மக்கள் ஹமாஸ் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் இசை விழாவிற்கு சென்றவர்களும், அப்பகுதியில் குடியிருக்கும் மக்களும் அடங்குவர்.
@bbc
இந்த அதிர்ச்சியில் காஸா மீது போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், தற்போது வரையில் 18,000 பாலஸ்தீன மக்களை கொன்று குவித்துள்ளது. இதில் 7,300 பேர்கள் சிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
போர் முடிவுக்கு வரவேண்டும்
ஹமாஸ் துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்ட Danielle Waldman-ன் தந்தை Eyal Waldman ஒரு கோடீஸ்வரர். Mellanox Technologies என்ற நிறுவனத்தை நிறுவியவர். 2019ல் அந்த நிறுவனத்தை சுமார் 6.8 பில்லியன் அமெரிக்க டொலருக்கு அவர் விற்றுள்ளார்.
Eyal Waldman தமது மகள் குறித்து தெரிவிக்கையில், அவளுக்கு நடனமாட பிடிக்கும். அவளுக்கு விலங்குகள் என்றால் பிரியம். அவள் அனைவரையும் கள்ளம் கபடமின்றி நேசிப்பவள்.
Credit: Eyal Waldman
அவளுக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். Noam உடன் ஊர் சுற்றுவாள் என பட்டியலிட்டுள்ளார். சம்பவத்தன்று Danielle மாயமானதாக தமக்கு தகவல் கிடைக்கும் போது இந்தோனேசியாவில் இருந்ததாக கூறியுள்ள Eyal Waldman, இஸ்ரேல் வான் எல்லைகள் மூடப்பட்டிருந்ததால், சிறப்பு அனுமதி பெற வேண்டியிருந்தது என்றார்.
ஒருவழியாக தோட்டாக்களால் துளைக்கப்பட்ட கார் கண்டுபிடிக்கப்பட்டது என தெரிவித்துள்ள Eyal Waldman, தமது மகளை மட்டும் காணவில்லை என்றார். ஆனால் 2 நாட்களுக்கு பின்னர் அவளது சடலம் மீட்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் படைகளால் தமது மகளும் அவள் காதலனும் கொல்லப்பட்டிருந்தாலும், போர் முடிவுக்கு வரவேண்டும் என்றும், காஸா பகுதியில் அமைதி திரும்ப வேண்டும் என்றும் Eyal Waldman நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாலஸ்தீன மக்களுக்கு தனி நாடு என்பது உரிமை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அக்டோபர் 7ம் திகதி தாக்குதலுக்கு காரணமானவர்கள் கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அதை இஸ்ரேல் நாடு செய்யும் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |