செங்கடலுக்கு இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பும் ஜேர்மனி: பின்னணி
ஜேர்மனி, தன் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்களை செங்கடலுக்கு அனுப்பியுள்ளதாக ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செங்கடலுக்கு விரையும் போர்க்கப்பல்கள்
அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப் போர் நிறுத்தம் தொடர்பில் ஈரானுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட சில மணி நேரங்களில், ஹோர்முஸ் ஜலசந்தியில் சுரங்கவெடிகளை அகற்றும் கப்பல்களை உடனடியாக பணியிலமர்த்தவேண்டும் என கப்பல் மற்றும் காப்பீட்டு தொழில்துறையினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், ஊடகவியலாளர்களை சந்தித்த ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான போரிஸ் பிஸ்டோரியஸ், நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் இதே நேரத்தில், நமது கண்ணிவெடி அகற்றும் கப்பலான Fuldaவும், கடற்படைக்கான விநியோகக் கப்பலான Moselம் சூயஸ் கால்வாய் வழியாக செங்கடலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன என்று கூறியுள்ளார்.

என்றாலும், ஜேர்மன் கப்பல்கள் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட, ஈரான் மற்றும் ஓமானிடமிருந்து அனுமதி பெறவேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
போர்க்கப்பல்கள் மட்டுமின்றி, ஜேர்மனி, நீருக்கடியில் செயல்படும் ட்ரோன்கள், கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மற்றும் கப்பல் பாதுகாப்பு குழுக்களையும் அனுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |