ஜேர்மனியில் பெரும் பிரச்சினைகளை உருவாக்கியுள்ள கருப்புப் பனி
ஜேர்மனியில் கருப்புப் பனி என்னும் இயற்கை நிகழ்வு பல பிரச்சினைகளை உருவாக்கிவருகிறது.
கருப்புப் பனி என்பது என்ன?
கரும் பனி அல்லது கருப்புப் பனி என்பது உண்மையில் கருப்பான பனி அல்ல. அதாவது சாலைகள் மீது மெல்லிய அடுக்காக படரும் பனிகட்டியே கருப்புப்பனி என அழைக்கப்படுகிறதாம்.
இந்த பனி வெண்மையாக இல்லாமல் ஒளி ஊடுருவும் தன்மையுடையதாக காணப்படுவதால், கருப்பாக காணப்படும் சாலையின் நிறத்திலேயே அது காணப்படும்.
Imagebroker/M.peuckert
அத்துடன், சாலையில் பனிக்கடி உருவாகியிருப்பதே தெரியாமல் இருப்பதால் வாகனங்களை நிறுத்தமுடியாமல் சாரதிகள் திணற, பாதசாரிகளும் வழுக்கி விழ, ஏராளம் விபத்துக்களுக்கு இந்த கருப்புப் பனி காரணமாக அமையும்.
ஜேர்மனியில் தொடர்ந்து பல பிரச்சினைகளை உருவாக்கிவரும் கருப்புப்பனி
ஜேர்மனி முழுவதும் இந்த கருப்புப் பனி பெரும் பிரச்சினைகளை உருவாக்கிவருகிறதாம். சில விமான நிலையங்களின் ஓடுபாதைகளில் கருப்புப் பனி உருவாகியுள்ளதால், நூற்றுக்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
சாலைகளில் விபத்துக்கள் தொடர்வதால் ஆங்காங்கு சில சாலைகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக 25 வயது சாரதி ஒருவரின் கார் வழுக்கிச் சென்று மரத்தில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
Imagebroker
பாதசாரிகள் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாவதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறதாம்.பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இந்த கருப்புப் பனி, ஜேர்மனியில் இயல்பு வாழ்க்கைகயை கடுமையாக பாதித்துள்ளது.
Imagebroker