ஜேர்மனிக்கு வரும் பிரித்தானியர்களுக்கு இனி இது கட்டாயம்! இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய விதி
ஜேர்மனி ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, நாட்டிற்குள் நுழையும் பிரித்தானியர்கள் எவரும், இரண்டு வாரங்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் ஒமைக்ரான் பரவல் அதிவேகமாக பரவி வருவதால், அங்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதனால் பிரித்தானியாவில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு 15-க்கும் மேற்பட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.
இதற்கிடையில், இந்த ஒமைக்ரான் வைரஸால், பிரித்தானியாவில் 7 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜேர்மனிக்குள் நுழையும் பிரித்தானியர்கள் எவரும், முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும் கட்டாயமாக இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தலுகு உட்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் மாநில சுகாதார ஆணையம் Robert Koch Institute (RKI), இன்று(18.12.2021) பிரித்தானியா கொரோனா ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
வரும், ஞாயிறு(19.12.2021) நள்ளிரவில் இருந்து, அதாவது பிரித்தானியாவின் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணி முதல், விமானம் மூலம் ஜேர்மனிக்கு வரும் பிரித்தானியார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜேர்மன் குடிமக்கள், குடியிருப்பாளர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள் ஆகியோர் மட்டுமே பிரித்தானியாவில் இருந்து நாட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இதைத் தவிர, பிரித்தானியாவில் இருந்து ஜேர்மனிக்குள் நுழையும் எவருக்கும் எதிர்மறையான PCR சோதனை தேவைப்படும். தடுப்பூசி போட்டிருந்தாலும், அவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்.
Robert Koch Institute (RKI) வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளில், பிரித்தானியா கொரோனா வைரஸ் மாறுபாடு கொண்ட கவலைக்குரிய பகுதியாகவும், கொரோனாவால் அதிக ஆபத்து கொண்டதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் வரும் ஜனவரி 3-ஆம் திகதி வரை நீடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.