பிரித்தானியாவில் ஒமைக்ரானால் 7 பேர் மரணம்! மருத்துவமனையில் உயரும் பாதிப்பு எண்ணிக்கை
பிரித்தானியாவில் ஒமைக்ரான் வைரஸால் இதுவரை 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒமைக்ரான் மாறுபாடு பிரித்தானியாவில் தீவிரமாக பரவி வருகிறது.
இதனால் பிரித்தானியாவில் மீண்டும் ஊரடங்கு அமுலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று(18.12.2021) UK Health and Security Agency வெளியிட்டுள்ள தகவலில், ஒமைக்ரான மாறுபாட்டால் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இந்த புதிய வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85-ஐ தொட்டுள்ளதையும் உறுதிபடுத்தியுள்ளது.
இதற்கு முன்பு மருத்துவமனையில் 65 பேர், இந்த புதிய வகை கொரோனா வைரஸால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 85-ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் மொத்தம் ஒமைக்ரான் வைரஸால் 10,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றை(17.12.2021)-ஐ விட 3,201 அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.