ஜேர்மனி: 2027-ல் 200 பில்லியன் யூரோ கடன் வாங்க திட்டம்
ஜேர்மனி அரசு, 2027-ஆம் ஆண்டுக்கான வரைவு பட்ஜெட்டில் சுமார் 200 பில்லியன் யூரோ கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கடன் பெரும்பாலும் பாதுகாப்பு செலவுகளுக்காக பயன்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைன் போருக்கு பிறகு ஐரோப்பாவில் பாதுகாப்பு சூழ்நிலை கடுமையாக மாறியுள்ளது. இதனால், ஜேர்மனி தனது பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
2027-ல் பாதுகாப்பு செலவுகள் 80 பில்லியன் யூரோவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், சமூக நலத்திட்டங்கள் மற்றும் பசுமை ஆற்றல் முதலீடுகளுக்கு நிதி ஒதுக்கப்படும். ஆனால், அதிகளவு கடன் எடுப்பது ஜேர்மனியின் நிதி நிலையை சிரமப்படுத்தும் என்ற எச்சரிக்கைகளும் எழுந்துள்ளன.
ஜேர்மன் அரசு, 2023-இல் அரசியல் மற்றும் சட்ட சிக்கல்களால் தனது பட்ஜெட்டை மறுசீரமைக்க வேண்டியிருந்தது. தற்போது, 2027 வரைவு பட்ஜெட்டில், கடன் அளவு அதிகரிப்பது, நாட்டின் பொருளாதார நிலைமைக்கு புதிய சவால்களை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
தற்போது பாதுகாப்பு செலவுகள் அவசியமானதாக இருந்தாலும், அதிக கடன் எடுப்பது எதிர்காலத்தில் வரி செலுத்தும் மக்களுக்கு கூடுதல் சுமையாக மாறும் என்ற சிக்கலும் இதில் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |