நாடுகடத்தப்பட்ட ரஷ்யர்களுக்காக..ஜேர்மன் உளவு நிறுவனம் செய்துள்ள விடயம்
ஜேர்மனியின் உள்நாட்டு உளவு நிறுவனமானது நாடு கடத்தப்பட்ட குழுக்களுக்காக பிரத்யேக உதவி எண்ணை நிறுவியுள்ளது.
நாட்டிற்குள் வெளிநாட்டு உளவாளிகளால் அச்சுறுத்தல், கண்காணிப்பு அல்லது உடல்ரீதியான வன்முறையை எதிர்கொள்ளும் நாடு கடத்தப்பட்ட குழுக்களுக்காக, ஜேர்மனி உள்நாட்டு உளவு நிறுவனம் பிரத்யேக எண்ணை நிறுவியுள்ளது.
உளவுத்துறைகளுக்கு புதிய அதிகாரங்கள்
இணையவழி மற்றும் கலப்புத் தாக்குதல்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கில், தகவல் தொடர்புகளை ஊடுருவிப் பார்ப்பதற்கும் வெளிநாட்டு எதிரிகளின் நடவடிக்கைகளை முடக்குவதற்கும், உளவுத்துறைகளுக்கு புதிய அதிகாரங்களை வழங்க ஜேர்மனி முயன்று வருகிறது.

இந்த சூழலில், ஜேர்மனியில் தஞ்சம் புகுந்த தனிநபர்களுக்கான உதவி எண்ணை உள்நாட்டு உளவு நிறுவனம் நிறுவியுள்ளது.
இதில் ஈரான் மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் ரஷ்யாவில் இருந்தும் வரும் அச்சுறுத்தல்களுக்கு முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.
இதனை விளம்பரப்படுத்தும் ஒரு சிற்றேட்டை, அரசியலமைப்புப் பாதுகாப்பிற்கான கூட்டாட்சி அலுவலகம் வெளியிட்டது.
புகாரளிக்க ஊக்குவிப்பு
நாட்டிற்குள் வெளிநாட்டு உளவாளிகளால் அச்சுறுத்தல், கண்காணிப்பு அல்லது உடல்ரீதியான வன்முறையை எதிர்கொள்ளும் நாடு கடத்தப்பட்ட குழுக்கள் மற்றும் அரசியல் அதிருப்தியாளர்களுக்காக இது செயல்முறைப்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், அரசால் ஆதரிக்கப்படும் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஐரோப்பாவில் செயல்படும் வெளிநாட்டு உளவாளிகளின் வலையமைப்புகளை உளவுத்துறை ஆய்வாளர்கள் அடையாளம் காணவும், வரைபடமாக்கவும் மற்றும் முறியடிக்கவும் உதவும் வகையில், சம்பவங்களை புகாரளிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மேலும் இதுகுறித்த BfV-யின் சிற்றேட்டில், 'பாதிக்கப்பட்ட தனிநபர்கள் வழங்கும் தகவல்கள், நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு நேரடியாக உதவக்கூடும். தீவிர அச்சுறுத்தல்களை முறியடிக்கவும் உதவக்கூடும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |