அழகிப்போட்டியில் வென்ற பெண்... பொறாமையில் காதலன் செய்த மோசமான செயல்
தன் காதலி அழகிப்போட்டியில் வென்றதால், அவள் இனி வேறு ஆண்களுடன் பழகுவாள் என்று அஞ்சிய காதலன், காதலியை தலையை வெட்டிக் கொலை செய்த பயங்கரம் ரஷ்யாவில் நடந்துள்ளது.
ரஷ்யாவிலுள்ள Novodvinsk என்ற இடத்திலுள்ள பனி நிறைந்த வனப்பகுதியில் ஒரு பெண்ணின் தலையற்ற உடல் கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அது Olga Shlyamina (33) என்ற பெண்ணுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
ஏற்கனவே Olgaவை ஐந்து நாட்களாக காணவில்லை என அவரது பெற்றோர் பொலிசில் புகாரளித்திருந்த நிலையில், அவரது தலையற்ற உடல் கிடைத்ததையடுத்து அவரது குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர்.
Olgaவுக்கும் அவரது கணவரான Vyacheslav (40)க்கும் சமீபத்திய சில நாட்களாக பிரச்சினை இருந்துவந்ததாகவும், தனது கணவரை பிரிய அவர் திட்டமிட்டுவந்ததாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரச்சினைக்கு காரணம் என்னவென்றால், சமீபத்தில் உள்ளூர் அழகிப்போட்டி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளார் Olga.
அப்போது தன்னுடன் வேலை செய்த ஒரு ஆணுடன் நெருங்கிப் பழகியதாக கூறி அவருடன் சண்டை போட்டுள்ளார் Vyacheslav.
அழகிப்போட்டியில் வென்றதால், அதைப் பயன்படுத்தி தன் மனைவி வேறு ஆண்களுடன் பழகலாம் என அஞ்சிய Vyacheslav, Olgaவை தாக்கி கொலை செய்ததாக கருதப்படுகிறது.
வாக்கிங் செல்வதாகக் கூறி மனைவியை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்து, தலையை வெட்டி அவரது உடலை Vyacheslav பனியில் புதைத்தாக பொலிசார் கருதுகிறார்கள்.
தொடர்ந்து Vyacheslav விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.



