வெற்றியடைந்த சந்திரயான் 3 விண்கலம்: இந்தியாவுக்கு கூகுள் நிறுவன CEO சுந்தர் பிச்சை வாழ்த்து
இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர்
நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய்வதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14ம் திகதி இந்தியா விண்வெளிக்கு ஏவியது.
இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலம் இந்திய நேரப்படி இன்று மாலை 6.04 மணியளவில் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி உள்ளது.

அத்துடன் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவரையும் நிலவின் மேற்பரப்பில் இந்தியா வெற்றிகரமாக இறக்கியுள்ளது.
சுந்தர் பிச்சை வாழ்த்து
இந்நிலையில் இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி(CEO) சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்தில், “என்னவொரு அருமையான தருணம், இன்று காலை சந்திரயான்-3 விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
A Moment of Marvel: Google CEO Sundar Pichai Cheers ISRO's Triumph ?? India's Landmark Soft Lunar Landing in the Southern Polar Region!#Chandrayaan3 #Chandrayaan_3 #Chandrayan3 #ISRO #VikramLander #PragyanRover #MoonLanding #Chandrayaan3Landing #IndiaOnTheMoon pic.twitter.com/AJHqWR6gHp
— Oneindia News (@Oneindia) August 23, 2023
அத்துடன் நிலவின் தென் துருவ பகுதியில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்துள்ளது என்றும் கூகுள் CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |