விராட் கோலியின் அபார சாதனையை தூள் தூளாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா
வங்காளதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா அபார சாதனை ஒன்றை படைத்தார்.
ஹர்திக் பாண்ட்யா விளாசல்
இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் ஆடிய வங்காளதேசம் 127 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 12வது ஓவரின் 5வது பந்தில் சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து வைத்தார்.
சாதனை முறியடிப்பு
இதன்மூலம் விராட் கோலியின் (Virat Kohli) சாதனையை ஹர்திக் முறியடித்தார். அதாவது ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5 முறை சிக்ஸருடன் போட்டியை முடித்து வைத்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி 4 முறையும், எம்.எஸ்.தோனி மற்றும் ரிஷாப் பண்ட் தலா 3 முறையும் இதனை செய்துள்ளனர்.
103 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்திக் பாண்ட்யா 81 சிக்ஸர் மற்றும் 116 பவுண்டரிகள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |