கோமாவிலிருந்து கண் விழித்த பிரபல ஹாலிவுட் நடிகர்: காத்திருந்த அதிர்ச்சி
உலகின் விளையாட்டு தொடர்பான திரைப்படங்களிலேயே அதிக பிரபலமான திரைப்படம் என அழைக்கப்படும் திரைப்படம் ஒன்றில் நடித்த பிரபல நடிகர் ஒருவர், விபத்தொன்றில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றார்.
கோமாவிலிருந்து கண் விழித்த பிரபல நடிகர்
2009ஆம் ஆண்டு வெளியான தி பிளைண்ட் சைட் (The Blind Side) என்னும் திரைப்படம், உலகின் விளையாட்டு தொடர்பான திரைப்படங்களிலேயே அதிக பிரபலமான திரைப்படம் என அழைக்கப்படுகிறது.

அந்த திரைப்படத்தில், பிரபல நடிகையான சாண்ட்ரா புல்லக்குடன் இணைந்து நடித்திருந்தார் க்வின்டன் ஆரோன் (41) என்னும் நடிகர்.
அந்த திரைப்படத்தில் அவர் இடம்பெற்ற காட்சிகள், விளையாட்டை விரும்புபவர்கள் மட்டுமின்றி அனைவரையும் மனதை நெகிழவைக்கும் வகையில் அமைந்திருக்கும்.
இந்நிலையில், ஆரோன் இந்த ஆண்டு, அதாவது, 2026ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் விபத்தொன்றில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றார்.
அவர் கோமாவிலிருந்து கண் விழித்தபோது, அவரது பெற்றோர் அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தியை அவருக்குத் தெரிவித்தார்கள்.
ஆம், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அறுவை சிகிச்சை போன்ற முக்கிய முடிவுகளை எடுக்க ஆவணங்களில் கையெழுத்திடவேண்டிய நிலை வந்தபோது, அவரது மனைவியான மார்கரிட்டாவால் (Margarita DeLeon) அந்த ஆவணங்களில் கையெழுத்திட இயலாது என்பது தெரியவந்தது.
அதாவது, 10 ஆண்டுகளுக்கு முன் தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி ஆரோனை திருமணம் செய்திருந்தார் மார்கரிட்டா.

ஆனால், உண்மையில் அவர் தனது முன்னாள் கணவரை விவாகரத்து செய்யவேயில்லை! ஆகவே, அவரால் ஆரோனின் ஆவணங்களில் கையெழுத்திட இயலாது என்பதுடன், அவரை சந்திக்கவும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி தெரியவந்ததைத் தொடர்ந்து ஆரோனும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆரோன் தற்போது அட்லாண்டாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் பிசியோதெரபி சிகிச்சை மூலம் நடப்பதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்.
அவர் முழுமையாக குணம் பெற பல மாதங்களோ அல்லது ஒரு வருடமோ கூட ஆகலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆனால், நான் அப்படி எண்ணவில்லை, நீங்கள் நினைப்பதைவிட சீக்கிரமாகவே நான் நடந்துவிடுவேன் என்கிறார் ஆரோன் நம்பிக்கையுடன்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |