இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30...
இந்திய விமானப்படை (IAF) இன்றும் நாளையும் (ஜூன் 7 முதல் ஜூன் 8) வரை ராஜஸ்தான் மாநிலத்தில், பாகிஸ்தான் சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதியில் முக்கிய போர் பயிற்சியை (combat drill) நடத்துகிறது.
இது NOTAM (Notice to Airmen) அறிவிப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அதிரடி பயிற்சி ஜூன் 7 மாலை 3.30 மணி முதல் ஜூன் 8 இரவு 9.30 மணி வரை நடைபெறுகிறது.
அந்த காலப்பகுதியில், பயிற்சி நடைபெறும் வான்வழியில் விமான போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும்.
பயிற்சியில் ஈடுபடும் விமானங்கள்:
ரஃபேல் (Rafale)
மிராஜ் 2000 (Mirage 2000)
சுகோய்-30 (Sukhoi-30)
மேற்பார்வை மற்றும் ஆதரவு விமானங்கள்
இந்த பயிற்சி (IAF) தயார்நிலை மதிப்பீட்டின் ஒரு பகுதியாக இருந்தாலும், இது சமீபத்தில் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் Operation Sindoor ஆகியவற்றுக்கு பிறகு பாதுகாப்பு பதிலடி நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானுடன் வான்வழி தடைகள், இருதரப்பும் விதித்துள்ள நிலையில், இந்த பயிற்சி பதற்றத்தை மேலும் உயர்த்தியுள்ளது.
இந்த பயிற்சி, இந்தியா தனது பாதுகாப்பு ஸ்திரத்தன்மை மற்றும் தடுப்புச் சாத்தியங்களை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
IAF drill near Pakistan border, Operation Sindoor 2024, India-Pakistan airspace restrictions, Indian Air Force exercise Rajasthan, Rafale Mirage Sukhoi in IAF drill, Pahalgam terror attack response, LOC ceasefire violations India, IAF NOTAM June 2024, India defense readiness