தாக்குதலை திட்டமிட்ட ஹமாஸ் புலனாய்வு தளபதி: குறிவைத்து தூக்கிய இஸ்ரேல் படை
ஹமாஸ் படையின் புலனாய்வு பிரிவின் துணைத் தலைவர் ஷாதி பாரூத் இஸ்ரேலிய பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னடைவில் ஹமாஸ்
இஸ்ரேல் ஹமாஸ் போர் 3வது வாரமாக இன்றும் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போரில் மொத்தமாக 7000 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலின் அதிரடியான தாக்குதலில் ஹமாஸ் படை தங்களது தளபதிகளை அடுத்தடுத்து இழந்து வருகிறது.
The IDF eliminated the deputy head of the Hamas Intelligence Directorate, Shaadi Baaroud, who was planning the October 7 attack. pic.twitter.com/9GLA8t0MIq
— NEXTA (@nexta_tv) October 26, 2023
அந்த வகையில் சமீபத்தில் இஸ்ரேல் உடனான போரில் ஹமாஸ் படையின் அப்துல் ரஹ்மான், கலீல் மஹ்ஜாஸ், மற்றும் கலீல் டெத்தாரி ஆகிய மூன்று துணைத் தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்ட ஹமாஸ் படையின் புலனாய்வு பிரிவின் துணைத் தலைவர் ஷாதி பாரூத்தை இஸ்ரேலி பாதுகாப்பு படை கொன்றுள்ளதாக அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |