இந்தியா வல்லரசாக மாறிவருகிறது., நாம் பிச்சை எடுக்கிறோம்., பாகிஸ்தான் தலைவர் கருத்து
பாகிஸ்தானின் பொருளாதார நிலையை இந்தியாவுடன் ஒப்பிட்டு அரசியல் தலைவர் ஒருவர் கூறிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Jamiat Ulema-Islam Fazla (JUI-F) தலைவரும் பாகிஸ்தானின் வலதுசாரி இஸ்லாமிய தலைவருமான மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் () தனது நாட்டை அண்டை நாடான இந்தியாவுடன் ஒப்பிட்டு, சுதந்திரத்திற்குப் பிறகு இரு நாடுகளின் வளர்ச்சியில் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று உலக வல்லரசாக இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் திவால்நிலையைத் தவிர்க்க போராடிக்கொண்டு இருக்கிறது.
'நம்மை (பாகிஸ்தான்) இந்தியாவுடன் ஒப்பிடுங்கள். இந்த இரண்டு நாடுகளுக்கும் ஒரே நாளில் சுதந்திரம் கிடைத்தது.
அனால், இன்று இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறது. நாம் திவால்நிலையிலிருந்து தப்பிக்கப் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறோம். இதற்கு யார் பொறுப்பு?" என்று ரஹ்மான் தேசிய சட்டமன்றத்தில் கூறினார்.
மேலும், கண்ணுக்குத் தெரியாத சக்திகள் திரைக்குப் பின்னால் இருந்து முடிவுகளைத் திட்டமிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளை வெறும் பொம்மைகளாகக் குறைப்பதே தேசத்தின் இக்கட்டான நிலைக்குக் காரணம் என்று அவர் விமர்சித்தார்.
ரெஹ்மானா தனது முன்னாள் போட்டியாளரான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) க்கு தனது ஆதரவை வழங்கினார். பேச்சின் போது, கூட்டங்களை ஏற்பாடு செய்ய பிடிஐக்கு உரிமை உண்டு என்று ரஹ்மான் கூறினார்.
இதனிடையே, இந்தியாவுடனான நிறுத்தப்பட்ட வர்த்தகத்தை மீண்டும் தொடங்குமாறு பாகிஸ்தான் தொழிலதிபர்கள் சமீபத்தில் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இத்தகைய முயற்சியால் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரம் புத்துயிர் பெறும் என வணிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |