முக்கிய கனிமங்கள், யுரேனியம் விநியோகம்., இந்தியா-கனடா புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா மற்றும் கனடா இடையே, முக்கிய கனிமங்கள் மற்றும் யுரேனியம் விநியோகம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இந்தியாவின் தலைநகர டெல்லியில் நடந்த சந்திப்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி முன்னிலையில், வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் அவரது கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த், புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்திய அணு ஆற்றல் துறை மற்றும் கனடாவின் Cameco நிறுவனம் இடையே 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான யுரேனியம் விநியோக ஒப்பந்தம் கையெழுத்தானது.
உலகின் மிகப்பாரிய யுரேனியம் நிறுவனங்களில் ஒன்றான Cameco, இந்தியாவிற்கு யுரேனியம் கனிமத்தை வழங்க உள்ளது.

மேலும், இரு நாடுகளும் 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை 50 பில்லியன் அமெரிக்க டொலர் வரை உயர்த்தும் இலக்கை நிர்ணயித்துள்ளன.
மட்டுமன்றி, Comprehensive Economic Partnership Agreement (CEPA) எனப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் நிறைவு செய்ய தீர்மானித்துள்ளனர்.
“எங்கள் உறவுகள் புதிய ஆற்றல், நம்பிக்கை, நேர்மறை சூழ்நிலையால் நிரம்பியுள்ளன. 50 பில்லியன் டொலர் வர்த்தக இலக்கை அடைவதே எங்கள் குறிக்கோள்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அதேபோல், “இந்தியா-கனடா உறவு, பாதுகாப்பு மற்றும் பொருளாதார துறைகளில் புதிய பாதையை உருவாக்கும்” என கனேடிய பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.
கனடாவின் ஓய்வூதிய நிதிகள் (Canada’s pension funds) இந்தியாவில் 100 பில்லியன் டொலர் முதலீடு செய்துள்ளன.
மேலும், கல்வி, AI, சுகாதாரம், டிஜிட்டல் ஆர்கிடெக்சர் போன்ற துறைகளில் இந்திய மற்றும் கனேடிய பல்கலைக்கழகங்கள் இணைந்து பணியாற்ற உள்ளன.
இந்த ஒப்பந்தங்கள், 2023-ல் ஏற்பட்ட அரசியல் பதற்றத்திற்குப் பிறகு, இரு நாடுகளின் உறவை மீண்டும் வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |