இந்தியா-சீனா உறவில் பதற்றத்தை குறைக்க முயற்சி
இந்தியா மற்றும் சீனா, பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் கீழ் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து தொடர்பில் உள்ளன.
இந்தியாவின் தற்போதைய பிரிக்ஸ் தலைமைத்துவத்தை ஆதரிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் சிறப்பு தூதர் Zhai Jun, கடந்த வாரம் மேற்காசிய விவகாரக் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வந்தபோது, வெளிவிவகார அமைச்சகச் செயலாளர் நீனா மல்ஹோத்ராவை சந்தித்தார்.
அவர், “இந்தியா மற்றும் சீனா போன்ற பெரிய வளர்ந்து வரும் நாடுகள், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகளில் எப்போதும் தொடர்பில் இருந்து வருகின்றன” எனக் கூறினார்.

இந்நிலையில், சீனாவின் பங்களிப்பை மதிப்பதாகவும், பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து பிராந்திய பதற்றத்தை குறைக்க விரும்புவதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, விரைவில் இந்தியா வருகிறார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், கடந்த ஆண்டு தியான்ஜினில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்திற்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தார்.
அவர் இந்த ஆண்டு இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020-இல் நடந்த கல்வான் மோதலுக்குப் பிறகு இது அவரது முதல் இந்திய பயணமாக இருக்கும்.
இந்த நடவடிக்கைகள், இரு நாடுகளின் உறவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#IndiaChina #BRICS #XiJinping #WangYi #Diplomacy #Geopolitics #IndiaNews #ChinaRelations