இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே சுதந்திர வர்த்தகம் குறித்து வெளியான தகவல்
இந்தியாவுக்கும் 27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே முன்மொழியப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை செப்டம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதே இதன் நோக்கம்.
இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை ஜூன் 28-ஆம் திகதி நிறைவடைந்ததாக இந்திய வர்த்தகத் துறை இணைச் செயலர் தர்பன் ஜெயின் (Darpan Jain) தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் அனைத்து 21 அத்தியாயங்கள் விவாதிக்கப்பட்டது மற்றும் அரசாங்க கொள்முதல், டிஜிட்டல் வர்த்தகம், வர்த்தகத்தில் தொழில்நுட்ப தடைகள், பொருட்கள் மற்றும் சந்தை அணுகல் போன்ற பல துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிக கூட்டங்களை ஏற்பாடு செய்ய நாங்கள் திட்டமிட்டுள்லதாவும், செப்டம்பர் கடைசி வாரத்தில் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.
எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ஜூன் 17, 2022 அன்று உத்தேச ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் முறையாக மீண்டும் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
இரு தரப்பினரும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் மற்றும் புவியியல் குறியீடுகள் (GI) பற்றிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
2007-இல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியா தொடங்கியது. ஆனால், வாகனங்கள் மற்றும் மதுபானங்கள் மீதான சுங்க வரி, தொழில் வல்லுநர்களின் நடமாட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளில் இரு தரப்பினரும் உடன்பாடு எட்டாததால் 2013ல் பேச்சு வார்த்தை முடங்கியது.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம், மதிப்புச் சங்கிலியைப் பாதுகாப்பது உட்பட, சரக்குகள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை இந்தியா விரிவுபடுத்தவும், பல்வகைப்படுத்தவும் உதவும்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கான இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 2022-23ல் 74.83 பில்லியன் டொலரிலிருந்து 2023-24ல் 75.92 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
2022-23ல் ஒரு வருடத்திற்கு முன்பு 59.38 பில்லியன் டொ லராக இருந்த இறக்குமதியும் இந்த காலகட்டத்தில் 61 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு 17 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அதேசமயம் மொத்த இறக்குமதியில் பங்கு 8.8 சதவீதமாக உள்ளது.
பிரித்தானியாவுடனான உத்தேச வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, பிரித்தானியாவில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றவுடன் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்லும் என மற்றொரு அதிகாரி தெரிவித்தார்
பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை கவனிக்கும் என்று அந்த அதிகாரி கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India-EU trade, investment agreement, India-European Union trade agreement talks