ஈரான் மீதான Midnight Hammer தாக்குதல்: இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதா அமெரிக்கா?
ஈரான் மீதான தாக்குதலின்போது தங்களது வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்தியதா என்பது குறித்து இந்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்கா தாக்குதல்
இஸ்ரேல், ஈரான் போரால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவும் சூழலில், அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
ஆனால், ஈரான் பேச்சுவார்த்தை நடத்துவது பலன் அளிக்காது எனக்கூறி மறுத்துவிட்டது. அதற்கு இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவதால்தான்.
இந்த நிலையில், 'Midnight Hammer' என்ற பெயரில் ஈரான் மீது அமெரிக்கா நேரடி தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு இந்திய வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்தியதாக தகவல் பரவியது. இதற்கு இந்திய அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.
இந்த கூற்று போலியானது
அமெரிக்க விமானங்கள் மேற்கொண்ட மாற்று வழிகளை அமெரிக்க கூட்டுப்படையினரின் தலைவர்களின் சேர்மேன் டேன் கெய்ன் விவரித்தார்.
மேலும் the Fact Check unit, "ஆபரேஷன் Midnight Hammerயின்போது ஈரானுக்கு எதிராக விமானங்களை ஏவுவதற்கு அமெரிக்கா இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதாக பல சமூக ஊடக கணக்குகள் கூறியுள்ளன. இந்த கூற்று போலியானது.
ஆபரேஷன் Midnight Hammerயின்போது அமெரிக்கா இந்திய வான்வெளியைப் பயன்படுத்தவில்லை. கூட்டுப் பணியாளர்களின் தலைவர் ஜெனரல் டேன் கெய்ன் அமெரிக்க விமானங்கள் பயன்படுத்தும் பாதையை விளக்கினார்" என தனது எக்ஸ்தள பதிவில் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |