ஈராக், சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்களுக்கு இலக்கு... ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் திட்டம்
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களைத் தாக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நெருக்கடியான சூழல்
ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களையும், சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்களையும் தாக்க திட்டமிட்டுள்ளதற்கான அறிகுறிகளை அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியான சூழல், வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் அல்லது வசிப்பவர்களை அதிக பாதுகாப்பு ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று ஏற்கனவே அமெரிக்கர்களுக்கு உலகளாவிய எச்சரிக்கையை ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மட்டுமின்றி, மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள 19 அமெரிக்க தளங்கள் தற்போது அச்சுறுத்தலில் உள்ளது. ஈராக்கில் உள்ள அல்-அசாத் மற்றும் அர்பில் விமானத் தளங்கள் உட்பட பல்வேறு முகாம்களில் அமெரிக்கா துருப்புக்களைக் கொண்டுள்ளது.
அமெரிக்கப் படைகள்
ஈராக்கிய அரசாங்கம் ஈரானின் நெருங்கிய நட்பு நாடாகும், ஆனால் ஈரானின் பரம எதிரியான அமெரிக்காவின் பங்காளியாகவும் உள்ளது. ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான சர்வதேச கூட்டணியின் ஒரு பகுதியாக ஈராக்கில் சுமார் 2,500 அமெரிக்க வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, 2023 அக்டோபரில் காஸா போர் வெடித்ததைத் தொடர்ந்து, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் ஈரான் சார்பு போராளிகளால் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்பட்டனர்.
சிரியாவில் பல ஆண்டுகளாக அமெரிக்க வீரர்கள் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையிலேயே ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களால் முதல் அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |