2030-ல் 2 ரில்லியன் டொலர் வருமானம் உருவாக்கும் திறன் கொண்ட நாடு இந்தியா - McKinsey அறிக்கை
2030-ல் 2 டிரில்லியன் டொலர் வருமானம் உருவாக்கும் திறன் கொண்ட நாடாக இந்தியா இருப்பதாக McKinsey அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 18 உயர் வளர்ச்சி திறன் வாய்ந்த துறைகள், 2030-க்குள் 1.7 முதல் 2 டிரில்லியன் டொலர் வரையான வருமானத்தை உருவாக்கும் திறன் கொண்டுள்ளதாக McKinsey & Company நிறுவனம் வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை 2023-இல் $690 பில்லியன் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி வாய்ந்த முக்கிய துறைகள்:
மின் வாகனங்கள், பேட்டரி உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மற்றும் சேவைகள், இ-காமர்ஸ், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி மற்றும் பாதுகாப்பு, cloud computing, உயிரி தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள், உற்பத்தி மின்னணுக்கள், ரோபோடிக்ஸ், புதுமைமிக்க கட்டிடங்கள், பயண மற்றும் சுற்றுலா உள்ளிட்டவை இந்த 18 துறைகளில் அடங்கும்.
இந்தியாவின் வளர்ச்சி திசை:
இந்த துறைகள் 2040-க்குள் இந்தியாவின் கூடுதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 30% அளவை வழங்கும் என McKinsey கணித்துள்ளது.
சில துறைகளில் இந்தியா தன்னிறைவு நோக்குடன் அடிப்படை வசதிகளை உருவாக்க வேண்டும். சில துறைகளில் விரைவாக விரிவுபடுத்த வேண்டும். சில துறைகள் இந்தியா மற்றும் உலக சந்தைகளுக்காக போட்டியளிக்கும் வகையில் கூர்மையான நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் McKinsey அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவுக்கான $2 டிரில்லியன் வாய்ப்பு, தொழில்நுட்பம், முதலீடு மற்றும் சந்தை தேவை ஆகிய மூன்று அடிப்படைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக McKinsey அறிக்கை கூறுகிறது.

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India 2 trillion usd opportunity 2030, McKinsey India growth report, India 18 high-growth sectors, India economic growth 2030, Indian EV and AI sector, India semiconductor strategy, Future of AI in India, India biopharma and aerospace, Indian tech export growth, India GDP growth forecast McKinsey