பாகிஸ்தானுக்கு 40 J-35 ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்கும் சீனா - இந்தியா பதற வேண்டிய காலமா?
சீனாவில் தயாரிக்கப்பட்ட J-35 ஸ்டெல்த் போர் விமானங்களை பாகிஸ்தான் விரைவில் பெற்றுக் கொள்ளவுள்ளது.
முதற்கட்டமாக 40 விமானங்களை சீனா வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது பாகிஸ்தான் விமானப்படையை ஐந்தாவது தலைமுறை போர் விமானங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் சேர்த்துவைக்கிறது.
இந்தியா ஏன் கவலைப்பட வேண்டும்?
இந்தியா தற்போது எந்த ஸ்டெல்த் போர் விமானத்தையும் பயன்படுத்தவில்லை. ரபேல் மற்றும் Su-30 MKI போர் விமானங்களுடன் இந்தியா மேலாதிக்கம் பெற்றிருந்தாலும், J-35 போர் விமானங்கள் வந்தவுடன் அந்த வலிமை சமனாகும் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
J-35-ன் அம்சங்கள்:
J-35A எனப்படும் இந்த விமானம் இரட்டை என்ஜின், சப்பர் சோனிக் வேகம், ரேடாரில் தெரியும் சாத்தியம் மிகக் குறைவு (Radar Cross Section: 0.001 sqm), மற்றும் மற்ற ஆயுதங்களுடன் இணைந்து குறி பகிரும் திறன் கொண்டது. இது F-35 போல் காணப்படுகிறது.

இஸ்ரேலுக்கு விலையுர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு
இந்தியாவின் பதிலடி - AMCA
இந்தியாவின் AMCA (Advanced Medium Combat Aircraft) திட்டம் தான் ஒரே விடை. ஆனால் அது 2035-க்குப் பிறகே பணிக்கு வரும். அதுவரை, இந்தியா தனது ரேடார் மற்றும் மற்ற பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்தவேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து ஸ்டெல்த் சக்தியில் முன்னேறும் நிலையில், இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Pakistan J-35 jets, India AMCA programme, China stealth fighter export, India vs Pakistan air power, J-35 FC-31 features, Indian Air Force stealth gap, 5th generation fighter jets India, J-35 vs Rafale comparison, China Pakistan defence deal, Indian radar stealth detection