சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை., ரஷ்யாவின் Container-S ரேடாரை வாங்க இந்தியா திட்டம்
இந்தியா தனது விமான பாதுகாப்பு திறனை அதிகரிக்க ரஷ்யாவிலிருந்து Container-S OTH (Over-the-Horizon) ரேடார் அமைப்பை வாங்கும் திட்டத்தில் உள்ளது.
இந்த ரேடார் சுமார் 3000 கி.மீ தொலைவில் உள்ள விமானங்களை கண்டறியும் திறன் கொண்டது.
எனவே சீனாவின் J-20 மற்றும் பாகிஸ்தானுக்காக சீனா உருவாக்கும் J-35A ஸ்டெல்த் யுத்தவிமானங்களைக் கூட இந்தியா முன்கூட்டியே கண்டறிந்து எதிர்வையும் திட்டங்களை தீட்ட முடியும்.
Container-S Radar என்பது ரஷ்யாவின் RTI Systems நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 29B6 எனப்படும் அதிநவீன ரேடார் அமைப்பாகும்.
இது ஓவர்த்-தி-ஹொரைசன் (OTH) தொழில்நுட்பம் கொண்டது. இது நிலத்தின் வளைவுகளை மீறி ionosphere ஊடாக ரேடியோ அலைகளை அனுப்பி மிக நீண்ட தூரங்களில் உள்ள இலக்குகளை சரியாகக் கண்காணிக்கிறது.
இந்த ரேடாரின் முக்கிய அம்சங்கள்:
- 5000 இலக்குகளை ஒரே நேரத்தில் கண்காணிக்கலாம்
- ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை கூட கண்டறியும் திறன் கொண்டது
- F-35 போன்ற நவீன ஸ்டெல்த் விமானங்களையும் கண்டறிய முடியும்
இந்தியாவின் நிலையான சர்வதேச எல்லைகளிலேயே இந்த ரேடாரை அமைத்தால் கூட சீனாவையும் பாகிஸ்தானையும் முழுமையாக கண்காணிக்க முடியும். மேலும், எதிரி நாடுகள் இதனை தாக்க முயன்றால் கூட, இந்தியாவுக்கு பதிலடி அளிக்க போதுமான நேரம் கிடைக்கும்.
பாதுகாப்பு வல்லுநர்கள் இந்த நடவடிக்கை இந்தியாவை விமான பாதுகாப்பு வலயத்தில் முக்கிய முன்னேற்றத்துக்கு இட்டுச் செல்லும் என தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |