ஹார்முஸ் வழியாக எண்ணெய் கப்பலைகளை அனுப்ப இந்தியா திட்டம்
ஈரான்-அமெரிக்கா மோதலால் ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா புதிய எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் தனது எண்ணெய் கப்பலைகளை ஹார்முஸ் வழியாக அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
ப்ளூம்பெர்க் வெளியிட்ட தகவலின்படி, இந்திய அரசு திட்டத்தை இறுதி செய்துள்ளது.
அனுமதி கிடைத்தவுடன், இந்திய கப்பல்கள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி பொருட்களை ஏற்றிச் செல்லத் தொடங்கும்.

உலகின் முக்கிய நீரிணைகளில் ஒன்றான ஹார்முஸ் வழியாக உலகின் 20 சதவீத எண்ணெய் வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனால், பிப்ரவரி மாதம் தொடங்கிய போருக்குப் பிறகு, அங்கு போக்குவரத்து கடுமையாக குறைந்துள்ளது. இதனால் உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
இந்தியாவின் Shipping Corporation of India நிறுவனம், இந்திய கடற்படை அனுமதி மற்றும் உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் உத்தரவுகள் கிடைத்தவுடன், வளைகுடா பகுதியில் மீண்டும் செயல்படத் தயாராக உள்ளது.
சமீபத்தில், வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அபாஸ் அராக்சியுடன் சந்தித்து, ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். ஈரான், “இந்திய கப்பல்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வோம்” என்று உறுதியளித்துள்ளது.
இதற்கிடையில், இந்திய கடற்படை வளைகுடா பகுதியில் தனது போர் கப்பல்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி, வான்வழி கண்காணிப்பையும் அதிகரித்துள்ளது. இந்தியக் கொடி கொண்ட வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா தனது எண்ணெய் தேவையின் 90 சதவீதம் மற்றும் இயற்கை எரிவாயுவின் 50 சதவீதம் இறக்குமதியிலேயே சார்ந்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து அதிகளவில் எண்ணெய் வாங்கி வந்தாலும், அதுவும் அரசியல் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. எனவே, ஹார்முஸ் வழியாக புதிய விநியோகத்தை உறுதிப்படுத்துவது இந்தியாவிற்கு மிக முக்கியமான ஒன்றாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |