சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை., இந்தியாவின் AI-LMG சோதனை வெற்றி
சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட எதிரி நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, இந்தியா வெற்றிகரமாக ஆயுத சோதனையொன்றை நடத்தியுள்ளது.
மலைப்பிரதேசத்தில், 14,000 அடி உயரத்தில், இந்திய இராணுவம் வெற்றிகரமாக செயற்கை நுண்ணறிவால் (AI) இயக்கப்பட்ட இலகுரக இயந்திர துப்பாக்கிகளை (LMG) சோதனை செய்துள்ளது.
டேராடூனில் உள்ள BSS Material Ltd. என்ற இந்திய பாதுகாப்பு நிறுவனம் உருவாக்கிய இந்த நவீன ஆயுதம், இந்திய ராணுவத்துடன் இணைந்து சோதனைக்குத் தாயாராக்கப்பட்டது.
இந்த AI LMG, இலக்குகளை தானாக கண்டறிந்து தாக்கும் திறன் கொண்டது.
'மேக் இன் இந்தியா' மற்றும் 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டங்களின் கீழ், இது இந்தியாவின் தற்காப்பு சாதனங்களை உள்நாட்டிலேயே உருவாக்கும் முயற்சியின் முக்கிய முனைவாக பார்க்கப்படுகிறது.
முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள்:
- Thermal and optical sensor fusion மூலம் துல்லியமாக இலக்கை அடையாளம் காணும்
- காற்றழுத்தம், தூரம் மற்றும் வெப்பநிலை ஆகிய சவால்களை சமாளிக்க Ballistic தொழில்நுட்ப திறன்
- கடுமையான பாதுகாப்பு குறியீடுடன் (Encrypted remote) தூரத்திலிருந்து கட்டுப்படுத்தும் அம்சம்
இந்த நவீன ஆயுதம், பாதுகாப்பு முகாம்கள், ராணுவக் கவனிப்புப் புள்ளிகள், மற்றும் தானியங்கி நிலைத்தளவுகளுக்குள் பயன்படுத்தக் கூடியது.
மேலும், இந்த AI மொழியியல் கூறு வெவ்வேறு ஆயுதங்களில் இணைக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. UGV, RWS, ட்ரோன் எதிர்ப்பு கருவிகள் போன்றவற்றிலும் இதனை பயன்படுத்த முடியும்.
இந்த பரிசோதனை, 'Operation Sindoor' வெற்றியின் பின்னர் நடைபெறுகிறது, இதில் இந்திய ஆயுதங்கள் பாகிஸ்தான் ஆயுதங்களைவிட சிறப்பாக செயல்பட்டன. AI LMG மூலமாக, இந்தியா தனது ராணுவ ஸ்திரத்தன்மையை மேலும் வலுப்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
AI light machine gun India, India AI weapon system test, High-altitude AI gun trial, Negev AI LMG India, Indian Army AI weapons, AI-powered defense systems, BSS Material Ltd defence, Make in India military tech, Aatmanirbhar Bharat weapons, AI gun tested at 14000 feet