ஒரே மாதத்தில் 3 உலகக்கோப்பை - ஆதிக்கம் செலுத்தும் இந்திய மகளிர் அணி
மகளிர் கபடி உலகக்கோப்பையை வென்றதன் மூலம், இந்திய மகளிர் அணி ஒரே மாதத்தில் 3 உலகக்கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது.
கபடி உலகக்கோப்பை வென்ற இந்தியா
11 அணிகள் பங்குபெற்ற உலகக் கோப்பை மகளிர் கபடி போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது.
இதில், லீக் போட்டிகளில் தாய்லாந்து, வங்கதேசம், ஜேர்மனி மற்றும் உகாண்டா அணிகளையும் அரையிறுதியில் ஈரானையும் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், சீன தைபே அணியை 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய மகளிர் அணி வென்று தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
Congratulations to our Indian Women’s Kabaddi Team for making the nation proud by winning the Kabaddi World Cup 2025! They have showcased outstanding grit, skills and dedication. Their victory will inspire countless youngsters to pursue Kabaddi, dream bigger and aim higher. pic.twitter.com/XRM8J2I2h0
— Narendra Modi (@narendramodi) November 24, 2025
வெற்றி பெற்ற இந்திய மகளிர் கபடி அணிக்கு, இந்திய பிரதமர் மோடி உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
ஒரே மாதத்தில் 3 உலகக்கோப்பை
தொடர்ந்து உலக அரங்கில் விளையாட்டு துறையில் இந்திய மகளிர் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

நவம்பர் 2 ஆம் திகதி மும்பையில் நடைபெற்ற 2025 மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கோப்பையை வென்றது.

நவம்பர் 23 ஆம் திகதி, கொழும்புவில் நடைபெற்ற பார்வையற்ற பெண்களுக்கான T20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நேபாள அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது.
நேற்று, இந்திய மகளிர் கபடி அணி உலகக்கோப்பையை வென்றதன் மூலம், ஒரே மாதத்தில் இந்திய மகளிர் அணி 3 உலககோப்பைகளை வென்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |