ஹார்முஸ் நீரிணை வழியாக பயணிக்க தயாராகும் இந்திய LPG கப்பல்கள்
இரண்டு இந்திய LPG கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல தயாராக உள்ளன.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், Pine Gas மற்றும் Jag Vasant ஆகிய இரண்டு இந்திய LPG கப்பல்கள், ஹார்முஸ் நீரிணை வழியாக பயணிக்க தயாராக உள்ளன.
கடந்த 24 மணி நேரமாக எந்த கச்சா எண்ணெய் கப்பலும் அந்த நீரிணை வழியாக செல்லவில்லை.
இந்த கப்பல்கள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா அருகே நிறுத்தப்பட்டுள்ளன. MarineTraffic தகவல்களின்படி, இவை விரைவில் புறப்பட தயாராக இருப்பதாக சிக்கனல்கள் அனுப்பியுள்ளன.

இந்த கப்பல்கள் இந்தியாவின் முக்கிய எரிசக்தி நிறுவங்களுடன் தொடர்புடையவை. Jag Vasant கப்பல் Bharat Petroleum Corporation Limited (BPCL) நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், Pine Gas கப்பல் Indian Oil Corporation (IOC) நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.
சனிக்கிழமைக்குள் இந்த கப்பல்கள் புறப்படலாம் என வர்த்தக வட்டாரங்கள் கூறினாலும், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
இதனிடையே, "எங்கள் கப்பல்கள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் செல்ல வேண்டும்" என இந்திய வெளிவிவகார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
தற்போது, வளைகுடா பகுதியில் இந்தியாவிற்கு சொந்தமான 22 கப்பல்கள் உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி, உலக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய முயற்சி செய்து வருகிறார்.
முன்னதாக, ஈரான் இரண்டு இந்திய கப்பல்களுக்கு அனுமதி அளித்திருந்தது. மேலும், பாகிஸ்தான் நோக்கி சென்ற ஒரு கப்பலும் வெற்றிகரமாக பயணத்தை முடித்துள்ளது. இதன்மூலம், சில கப்பல்கள் பேச்சுவார்த்தை அடிப்படையில் அனுமதி பெறுகின்றன என்பது தெளிவாகிறது.
இந்த இரண்டு LPG கப்பல்களின் பயணம், ஹார்முஸ் நீரிணையில் வணிக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குமா என்பதை உலகம் கவனித்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |