இந்திய கடற்படையின் நடவடிக்கை வெற்றி; சோமாலியாவில் கடத்தப்பட்ட கப்பலில் 15 இந்தியர்கள் உட்பட 21 பணியாளர்கள் மீட்பு
அரபிக்கடலில் சோமாலியா கடற்கரை அருகே கடத்தப்பட்ட கப்பலில் இந்திய கடற்படையின் நடவடிக்கை வெள்ளிக்கிழமை இரவு நிறைவடைந்துள்ளது.
15 இந்தியர்கள் உட்பட 21 பணியாளர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்திய கடற்படையின் MARCOS கமாண்டோக்கள் கப்பலில் சோதனை நடத்தினர். ஆனால், கப்பலில் கடற்கொள்ளையர்கள் யாரும் காணப்படவில்லை.
கடத்தப்பட்ட கப்பலை மீட்க INS Chennai கடற்படை கப்பல் அனுப்பப்பட்டது. இந்திய கடற்படையின் கடுமையான எச்சரிக்கைக்கு பயந்து கடத்தல்காரர்கள் கப்பலை விட்டு தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.
ஆயுதங்களுடன் கப்பலில் இறங்கிய 5-6 கடற்கொள்ளையர்கள்
ஜனவரி 4ஆம் திகதி கடற்கொள்ளையர்கள் கப்பலுக்குள் நுழைந்துள்ளனர் நடந்தது, ஆனால் இது பற்றிய தகவல் மறுநாள் (வெள்ளிக்கிழமை) தான் வெளிச்சத்திற்கு வந்தது.
லைபீரிய கொடி ஏற்றப்பட்ட இந்த கடத்தப்பட்ட கப்பலின் பெயர் லீலா நோர்ஃபோக் (MV Lila Norfolk).
கப்பல் பிரித்தானியாவின் UKMTO (United Kingdom Maritime Trade Operations) போர்ட்டலுக்கு செய்தி அனுப்பியதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. ஜனவரி 4-ஆம் திகதி மாலை சுமார் 5-6 பேர் ஆயுதங்களுடன் கப்பலில் இறங்கியதாகக் கூறப்பட்டது.
இந்திய கடற்படையின் நடவடிக்கை வெற்றி
இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில், கடத்தல் பற்றிய தகவல் கிடைத்ததும், கடத்தப்பட்ட கப்பலை நோக்கி ஒரு கடல் ரோந்து விமானம் P8I அனுப்பப்பட்டது. வணிகக் கப்பலைப் பாதுகாக்க, ஆண்டி பைரசி ரோந்துப் பணியில் இருந்து திசைமாராப்பட்டு INS Chennaiயும் அனுப்பப்பட்டது.
இன்று 15:15 மணியளவில் MV Lila Norfolk கப்பலை இடைமறித்து, Maritime Patrol Aircraft, Predator MQ9B மற்றும் integral helos ஆகியவற்றைப் பயன்படுத்தி கப்பல் தொடர்ச்சியான கண்காணிப்பில் வைக்கப்பட்டது. போர்க்கப்பலில் இருந்த இந்திய கடற்படை Marine Commandos MVயில் ஏறி, சுத்திகரிப்பு பணியை தொடங்கினர் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Indian Navy, INS Chennai, cargo ship Hijacked off Somalia coast, 15 Indians rescued, MV Lila Norfolk, Indian Navy rescue mission Success