இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு., சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள ருவாங் என்ற எரிமலை வெடித்தது.
24 மணி நேரத்திற்குள் சுமார் 5 வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் எரிமலைக்குழம்பு கிலோமீட்டர் தூரம் பாய்ந்தது தெரியவந்ததாகவும் கூறிய இந்தோனேசியாவின் புவியியல் ஏஜென்சி கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் கவனாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிமலையில் இருந்து வெளியேறிய புகை மற்றும் சாம்பல் அருகில் உள்ள பகுதிகளை சூழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எரிமலைக்குழம்பு பாரிய அளவில் அருகில் உள்ள பகுதிகளை சென்றடைவதால் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
725-மீட்டர் (2,378-அடி) ருவாங் எரிமலையிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் (3.7 மைல்) தொலைவில் இருக்கும்படி அதிகாரிகள் உள்ளூர் மக்களைக் கேட்டுக் கொண்டனர்.
மறுபுறம், வெடித்த எரிமலையின் ஒரு பகுதி கடலில் விழுந்து சுனாமியை ஏற்படுத்தலாம் என அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்களுக்கு பல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மறுபுறம், அந்த பகுதியில் உள்ள சுமார் 11 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் படகுகள் மூலம் அருகில் உள்ள சுலவேசி தீவில் உள்ள மனடோ நகருக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.
இதற்கிடையில், இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்புகள் பொதுவானவை. 2018-ஆம் ஆண்டு அனக் கிரகடோவா எரிமலை வெடித்தது சுமத்ரா மற்றும் ஜாவா கடற்கரையில் சுனாமியை ஏற்படுத்தியது.
எரிமலையின் சில பகுதிகள் கடலில் விழுந்தன. இந்த சம்பவத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Indonesia volcano eruption, Tsunami threat, International News