பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி., இந்தியக கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு
இந்தியக் கடற்படையில் 2025-ஆம் ஆண்டு 10 புதிய போர் கப்பல்கள் சேவையில் இணைக்கப்பட உள்ளன.
இதன் தொடக்கமாக, ஆழமற்ற நீரிலும் இயங்கக்கூடிய முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்கப்பலான INS Arnala ஜூன் 18-ஆம் திகதி விசாகப்பட்டினத்தில் சேவையில் இணைக்கப்படும்.
இந்த நிகழ்வில் பாதுகாப்புத் தலைமை அதிகாரி அனில் சவுகான் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொள்வார்கள்.
INS அர்னாலா இந்தியா முழுமையாக உள்நாட்டில் வடிவமைத்த அதிநவீன Anti-Submarine Warfare Shallow-Water Craft (ASW-SWC) போர் கப்பலாகும்.
இது BEL, Larsen & Toubro, Mahindra Defence, MEIL போன்ற இந்திய நிறுவனங்களின் தொழில்நுட்பங்களை 80 சதவீதத்திற்கும் மேலாக கொண்டுள்ளது.
கப்பலின் சிறப்பம்சங்கள்:
- நீளம்: 77 மீட்டர், எடை: 1490 டன்கள்
- டீசல் எஞ்சின் மற்றும் வாட்டர்ஜெட் இயக்க முறை
- தற்காலிக போர் கருவிகள், நவீன சென்சார்கள்
- subsurface surveillance, search and rescue missions, low-intensity maritime operations-க்கு ஏற்றது.
இந்த கப்பல் ‘Aatmanirbhar Bharat’ திட்டத்தின் கீழ் GRSE - L&T கூட்டுச் செயல்திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் வாஸை அருகே உள்ள 'அர்னாலா கோட்டையை' பின்பற்றி இந்த கப்பலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கப்பலின் சின்னமாக ஆஜர் நத்தை (auger shell) அமைந்துள்ளது. இதன் குறியீடு, கடலில் துணிச்சலுடன் எதிரிகளை எதிர்க்கும் சக்தி மற்றும் துல்லியமான தாக்கம் ஆகும். ‘அர்ணவே சௌரியம்’ (Arnave Shauryam) எனும் அதின் மோட்டோ, கடலில் வீரத்தை பிரதிபலிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
INS Arnala commissioning, Indian Navy ASW shallow water craft, Arnala warship India 2025, Indian Navy new warships 2025, Atmanirbhar Bharat Navy, GRSE L&T defence project, Indian Ocean coastal defence, CDS Anil Chauhan Navy event, Arnala Fort warship name, India maritime security fleet