ரஷ்யாவின் உக்கிரத் தாக்குதலுக்கு இலக்கான உக்ரைன்: 16 கடந்த இறப்பு எண்ணிக்கை
Kyiv comes under intense Russian bombardment: உக்ரைன் மீது ரஷ்யாவின் கடுமையான குண்டுவீச்சில் 16க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
உக்ரைனின் தலைநகரான கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா நடத்திய உக்கிரமான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதிகபட்ச சேதம்
போர் தொடங்கியதிலிருந்து அந்நகரம் மீது நடத்தப்பட்ட மிகத் தீவிரமான வான்வழித் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். நள்ளிரவு வாக்கில் தொடங்கி மதியம் வரை நீடித்த தாக்குதலில், வீடுகள், ஒரு பாடசாலை மற்றும் குழந்தைகள் மருத்துவ மையம் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன.

தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், 33 பேர் காயமடைந்ததாக மற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது ஒரு மிகப்பெரிய தாக்குதல்; பொதுமக்கள் பயன்பாட்டிற்கான உள்கட்டமைப்புகளுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில், பல்வேறு வகையான பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஒருங்கிணைத்து ரஷ்யர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இரவுநேரத் தாக்குதலில் ரஷ்யா டசின் கணக்கான பாலிஸ்டிக், குரூஸ் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும், 168 ட்ரோன்களையும் ஏவியதாக உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.
பின்னர், 46 குரூஸ் ஏவுகணைகளில் 41-ஐயும் 145 ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை தெரிவித்தது; எனினும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஏவப்பட்ட அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணைகள் எதையும் இடைமறித்து அழிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளின் பற்றாக்குறையால், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே வந்து சேரக்கூடிய அதிவேக ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள உக்ரைன் திணறி வருகிறது.
ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்
இதனிடையே, பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, எத்தனை ஏவுகணைகள் ஏவப்பட்டன என்பதை அறிவிப்பதை நிறுத்த விமானப்படை இந்த மாதத் தொடக்கத்தில் முடிவு செய்தது.
இந்த நிலையில், தாக்குதல்களுக்கு உலகளாவிய ரீதியில் கண்டனம் தெரிவிக்குமாறு ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். வான் பாதுகாப்பு வசதிகள் குறைவாகவே உள்ள நிலையில், இரு தரப்பினரும் நீண்ட தூரத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

உக்ரைன், புதிதாக உருவாக்கப்பட்ட கிரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி மாஸ்கோவிற்கு அருகிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
அதே நேரத்தில், ரஷ்யா கடுமையான பாலிஸ்டிக் ஏவுகணைகளை அதிக அளவில் பயன்படுத்தி கீவ் மீதான தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |