ஈரான் தாக்குதல்: ஹோர்முஸ் நீரிணையில் இந்தியர்கள் உயிரிழப்பு
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பலொன்றை ஈரான் தாக்கியதில் 2 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் ‘ஸ்கைலைட்’ (Skylight) என்ற எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பீஹாரைச் சேர்ந்த கப்பல் கேப்டன் ஆஷிஷ் குமார் (Ashish Kumar) மற்றும் மும்பையைச் சேர்ந்த டிக்சித் சோலங்கி (Dixit Solanki) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், ராஜஸ்தானைச் சேர்ந்த தலிப் சிங் காணாமல் போயுள்ளார்.
இந்த தாக்குதல், ஓமன் துறைமுகம் அருகே நடந்த ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு நிகழ்ந்தது.
ஸ்கைலைட் கப்பலில் 20 பேர் இருந்தனர். இதில் 15 பேர் இந்தியர்கள், 5 பேர் ஈரானியர்கள். அனைவரும் மீட்கப்பட்டதாக ஓமான் கடற்படை தெரிவித்துள்ளது.
அஷிஷ் குமார், ஜனவரி 20-ஆம் திகதி Merchant Navy-யில் சேர்ந்தார். பிப்ரவரி 22-ஆம் திகதி ‘ஸ்கைலைட்’ கப்பலில் கேப்டனாக பணியில் சேர்ந்தார்.
தாக்குதலுக்குப் பிறகு அவரது உடல் கேப்டன் அறையில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. அவரது குடும்பம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த டிக்சித் சோலங்கி, குடும்பத்துடன் சில மாதங்கள் கழித்துவிட்டு மீண்டும் பணியில் சேர்ந்திருந்தார். தாக்குதலுக்குப் பிறகு அவரது குடும்பம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை உலக எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியமான இடம். உலக எண்ணெய் போக்குவரத்தின் 20 சதவீதம் இங்கு நடைபெறுகிறது. இங்கு போர் பதற்றம் அதிகரிப்பது உலகளாவிய எரிசக்தி சந்தையை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |