அமெரிக்காவின் 5வது கடற்படை தளத்தின் மீது ஈரான் தாக்குதல்: 21 வீரர்கள் உயிரிழப்பு
அமெரிக்க கடற்படை தளத்தின் மீது ஈரான் இராணுவ படை தாக்குதல் நடத்தி இருப்பது மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.
அமெரிக்க தளம் மீது தாக்குதல்
அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டு இராணுவ தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில், அமெரிக்க-இஸ்ரேலிய படைகளின் தாக்குதலுக்கு எதிராக ஈரானும் விடாமல் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் பஹ்ரைனின் மனாமா நகரில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தலைமையகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
#BREAKING
— Tehran Times (@TehranTimes79) March 8, 2026
US's weapons warehouses in Bahrain were targeted pic.twitter.com/A1QwBy90I0
ஈரானிய ஊடகம் டெஹ்ரான் டைம்ஸ் வெளியிட்ட தகவலின், அமெரிக்காவின் 5வது கடற்படை தலைமையகம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 21 வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அமெரிக்க ராணுவ தளம் தீப்பற்றி எரியும் காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.
இருப்பினும் இந்த தாக்குதல் குறித்தோ, அதனால் ஏற்பட்ட இழப்புகள் குறித்தோ அமெரிக்கா எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கைகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் 5வது கடற்படை தலைமையகம்
இந்த கடற்படை தலைமையகம் பாரசீக வளைகுடா, செங்கடல் மற்றும் அரபிக்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2.5 மில்லியன் சதுர மைல்கள் பரப்பளவை கண்காணிப்பு பகுதிகளாக கொண்டுள்ளது.
இந்த பிராந்தியத்தில் மட்டும் 8,300 மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர்.
கிட்டத்தட்ட 47 நாடுகள் இணைந்து இந்த கடல்சார் படைகளை வழி நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |