போர் முடிவுக்கு வரவில்லை... தயாராக இருங்கள்: ட்ரம்ப் மீண்டும் விடுத்த எச்சரிக்கை
ஈரானுக்கு எதிராக இரண்டு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் போர் முடிவுக்கு வரவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தமது சமூக ஊடகத்தில் அறிவித்துள்ளார்.
அழித்தொழிப்பதற்கு
போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியது; அதே நேரத்தில், புதன்கிழமையன்று ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன; மேலும், வியாழக்கிழமை அதிகாலையில் ஹிஸ்புல்லா வடக்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

பிப்ரவரி 28 ஆம் திகதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் பல முக்கியத் தளங்கள் மீது கூட்டுத் தாக்குதல்களை நடத்தியதிலிருந்து, மத்திய கிழக்கில் மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஈரான், பிராந்தியம் முழுவதும் தாக்குதல்களை நடத்தியும், முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முடக்கியும் பதிலடி கொடுத்தது.
இந்த நிலையில், தமது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஏற்கனவே பெருமளவில் பலவீனமடைந்த எதிரியை அழித்தொழிப்பதற்கும், அவர்களது உயிரைப் பறிப்பதற்கும் பொருத்தமான மற்றும் அவசியமான கூடுதல் வெடிப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் பிறவற்றுடன் கூடிய அனைத்து அமெரிக்கக் கப்பல்கள், விமானங்கள், இராணுவ வீரர்கள் ஆகியோர், எட்டப்பட்ட உண்மையான ஒப்பந்தம் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் வரை, ஈரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலைநிறுத்தப்பட்டிருப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

ஆவலுடன் எதிர்நோக்கி
மேலும், ஏதேனும் ஒரு காரணத்தினால், அது மிகவும் சாத்தியமற்றதே என்றாலும், அவ்வாறு அமையாவிட்டால், இதுவரை எவரும் கண்டிராத வகையில், இன்னும் பெரிதாகவும், சிறப்பாகவும், வலிமையாகவும் தாக்கப்படும்.
மிக நீண்ட காலத்திற்கு முன்பே, இதற்கு மாறான அனைத்துப் போலியான வாய்ச்சவடல்களையும் மீறி, பின்வரும் விடயங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன: அணு ஆயுதங்கள் ஏதும் இருக்காது; மேலும், ஹோர்முஸ் நீரிணை திறந்த நிலையிலும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

இதற்கிடையில், நமது மாபெரும் இராணுவம் ஆயுதங்களை நிரப்பிக்கொண்டும், ஓய்வெடுத்துக்கொண்டும் இருக்கிறது; சொல்லப்போனால், அது தனது அடுத்த வெற்றியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது. அமெரிக்கா மீண்டும் களத்திற்கு வந்துவிட்டது என ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |