அமைதி மட்டுமே குறிக்கோள்: 14 அம்ச திட்டத்தில் அணுசக்தி விவகாரம் இல்லை: ஈரான் விளக்கம்
ஈரானின் அமைதி திட்டத்தில் அணுசக்தி விவகாரம் தொடர்பாக எதுவும் இல்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானின் அமைதி திட்டம்
ஈரான் - அமெரிக்க இடையிலான போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி பேச்சுவார்த்தையில் இருநாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ஆனால் சமீபத்தில் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் முன்வைத்த 14 அம்ச திட்டத்தில் அணுசக்தி குறித்த அம்சங்களும் இடம்பெற்று இருப்பதாக அல்-ஜசீரா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் ஈரான் முன்மொழிந்த அமைதி திட்டத்தில் அணுசக்தி தொடர்பான எந்தவொரு அம்சங்களும் இடம்பெறவில்லை என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் எஸ்மாயில் பாகாயி ஞாயிற்றுக்கிழமை தஸ்னிம் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது உறுதிபடுத்தியுள்ளார்.
போரை நிறுத்துவது மட்டுமே ஈரானின் கவனம்
மேலும் ஈரான் முன்மொழிந்த 14 அம்ச திட்டம், முழுக்க முழுக்க போரை முடிவுக்கு கொண்டு வருவதை மட்டுமே நோக்கமாக கொண்டிருப்பதாகவும், அதில் அணுசக்தி தொடர்பாக எந்தவொரு விவரங்களும் இடம்பெறவில்லை என்றும் எஸ்மாயில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

ஈரானை பொறுத்தவரை பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவது மட்டுமே முதல் குறிக்கோள் என்றும், குறிப்பாக லெபனானில் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான நிபந்தனைகள் அதில் இடம்பெற்று இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மத்தியஸ்தர்கள் மூலமாக இதனை அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தி இருப்பதாகவும், அதற்கு மத்தியஸ்தர்கள் மூலமாக அமெரிக்காவும் பதில் அளித்து இருப்பதாஅ எஸ்மாயில் தகவல் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |