ஈரானை சூரையாடும் மழை வெள்ளம்...நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
ஈரானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 69 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை அந்த நாட்டின் அவசர சேவைகள் தகவல் தெரிவித்துள்ளன.
ஈரானில் அரிதாகவே ஏற்படும் மழை வெள்ளப் பெருக்குகள் இந்தாண்டு ஒன்பது நாட்களுக்கு முன்பே தொடங்கியது.
இதனால் ஈரானின் வானிலை ஆராய்ச்சி அமைப்புகள் பல்வேறு மாகாணங்களுக்கு இரண்டாவது தீவிர வெள்ள எச்சரிக்கையை வழங்கியுள்ளது.
Iran declares state of emergency due to rain and floods pic.twitter.com/Lb3FMLTLon
— Ignorance, the root and stem of all evil (@ivan_8848) July 28, 2022
இந்தநிலையில், ஈரானில் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்து இருப்பதாக அந்த நாட்டின் அவசர சேவை தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த எதிர்பாராத வெள்ளத்தில் ஈரானின் 31 மாகாணங்களில் பத்தியாரி, இஸ்பஹான், யாஸ்த், லோரெஸ்தான், மசாந்தரன், தெஹ்ரான் மற்றும் செஹர்மேகல் உட்பட 24 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கூடுதல் செய்திகளுக்கு: செஸ் ஒலிம்பியாட்டில் கவனம் ஈர்க்கும்...8 வயது பாலஸ்தீன சிறுமி!
மேலும் ஈரானின் நெருக்கடி மேலாண்மை அமைப்பின் தகவல்படி, வெள்ளத்தில் 45 பேர் காணாமல் போய் இருப்பதாகவும், 41 பேர் காயமடைந்து இருப்பதாகவும் தெரிவந்துள்ளது.