ஹார்முஸ் சுங்கக் கட்டண நடைமுறையை முறைப்படுத்திய ஈரான்: எந்த நாடுகளுக்கு அனுமதி
ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் தீர்வு எதுவும் எட்டப்படாத நிலையில், ஈரான், அந்த நீரிணையைக் கடந்து செல்ல விரும்பும் கப்பல்களுக்காகப் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், அவற்றிடமிருந்து சுங்கக் கட்டணத்தையும் வசூலிக்க முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து அனுமதி
உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு வழக்கமாகப் பயணிக்கும் அந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் முன்னெடுப்பதற்கான ஓர் ஒப்பந்தத்தை அமெரிக்கா வலியுறுத்தி வந்த அதே வேளையில், அந்த நீரிணையின் மீதான தனது கட்டுப்பாட்டை முறைப்படுத்தும் நடவடிக்கையை ஈரான் முன்னெடுத்தது.

PGSA எனப்படும் பாரசீக வளைகுடா நீரிணை ஆணையமானது கப்பல்கள் பயணம் செய்வதற்கு முன் போக்குவரத்து அனுமதி பெறவும், சுங்கக் கட்டணம் செலுத்தவும் கோரும் ஒரு புதிய கட்டமைப்பை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது.
மட்டுமின்றி, நீரிணை வழியாகப் பாதுகாப்பாகச் செல்ல விரும்பும் அனைத்துக் கப்பல்களும், உரிமை, காப்பீடு, பணியாளர் விவரங்கள் மற்றும் பயணிக்க உத்தேசித்துள்ள வழித்தடம் ஆகியவற்றின் விரிவான பதிவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
வழங்கப்பட்டுள்ள அந்தப் படிவத்தில் 40-க்கும் மேற்பட்ட கேள்விகள் உள்ளதாகவும், அதன்படி கப்பல்கள் தங்களின் பெயர், அடையாள எண், முந்தைய பெயர், புறப்படும் மற்றும் சேரும் நாடு, கப்பலின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர்கள்,
இயக்குபவர்கள் மற்றும் பணியாளர்களின் நாடு, அத்துடன் கப்பலில் உள்ள சரக்குகளின் விவரங்கள் ஆகியவற்றையும் வெளியிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகார அமைப்புக்கு மின்னஞ்சல்
PGSA வெளியிட்டுள்ள அறிக்கையில், கப்பல்கள் நீரிணையைக் கடந்து செல்வதற்கு முன்னர், அந்தப் படிவத்தை முழுமையான மற்றும் துல்லியமான தகவல்களுடன் பூர்த்தி செய்து அதிகார அமைப்புக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, வழங்கப்படும் எந்தவொரு தவறான அல்லது முழுமையற்ற தகவலுக்கும் விண்ணப்பதாரரே முழுப் பொறுப்பாவார் என்றும், அதன் விளைவாக ஏற்படும் பின்விளைவுகளை அவரே ஏற்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஈரான் மீது தடைகளை விதிப்பதன் மூலம் அமெரிக்காவிற்கு இணங்கும் நாடுகள், நீரிணையைக் கடப்பதில் நிச்சயமாகச் சிரமங்களை எதிர்கொள்ளும் எனவும் இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |