ஹார்முஸில் கப்பல்களுக்கு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தும் ஈரான்
ஈரான், ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் வணிகக் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது.
ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை குழுத் தலைவர் எப்ராஹிம் அசீஸி, ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் வணிகக் கப்பல்களுக்கு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.
ஈரானுடன் ஒத்துழைக்கும் நாடுகளுக்கே அனுமதி வழங்கப்படும் என்றும் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸில் போக்குவரத்தை கட்டுப்படுத்த தொழில்முறை முறைமை ஒன்றை உருவாக்கி விட்டதாகவும், விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஈரான் அரசு கூறியுள்ளது.

தற்போது சீனா, ஜப்பான், பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளின் கப்பல்கள் அனுமதி பெற்று சென்றுள்ளன. ஐரோப்பிய நாடுகளும் ஈரான் கடற்படையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஹார்முஸ் நீரிணை உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியமான பாதையாகும். உலக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வர்த்தகத்தின் 20 சதவீதம் இங்கு நடைபெறுகிறது.
பிப்ரவரி 28 அன்று ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, இந்த நீரிணை வழியாக போக்குவரத்து கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 8 போர்நிறுத்தத்திற்கு பிறகு கூட, ஈரான் கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
ஈரான், “Freedom Project” எனப்படும் அமெரிக்கா தலைமையிலான தற்காலிக பாதுகாப்பு முயற்சியில் பங்கேற்கும் நாடுகளுக்கு அனுமதி வழங்கமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், ஹார்முஸ் வழியாக சென்ற கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலித்து வருவாய் பெற்றதாகவும் ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை, உலக எரிசக்தி சந்தைகளில் விலை உயர்வை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு இது மிகப்பெரிய சவாலாக மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#Iran #HormuzStrait #GlobalEnergy #OilCrisis #ShippingNews #TransitFees #WorldEconomy #IndiaImpact #EnergyMarkets #MiddleEast