ஈரானுக்கு எதிராக பிரித்தானியா களமிறங்குமா? சட்டவிரோதம் என பிரதமர் ஸ்டார்மர்
ஈரானுக்கு எதிராக இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா களமிறங்கும் என்றால், அதில் பிரித்தானியா பங்கேற்க வாய்ப்பில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோதமாக இருக்கலாம்
இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா தங்களைத் தாக்கினால், மத்திய கிழக்கில் அமெரிக்கா ஒரு முழுமையான போரை தூண்டிவிடும் அபாயத்தை உருவாக்குகிறது என்று ஈரான் ஏற்கனவே எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதலுக்கு ட்ரம்ப் முடிவெடுப்பார் என்றால், அமெரிக்காவிற்கு ஆதரவளிக்குமா என்பது தொடர்பில் பிரித்தானியா இன்னும் அறிவிக்கவில்லை.
ஆனால், இந்த விவகாரத்தில் பிரித்தானியாவின் ஈடுபாடு சட்டவிரோதமாக இருக்கலாம் என்று பிரதமர் ஸ்டார்மரை அட்டர்னி ஜெனரல் லார்ட் ஹெர்மர் எச்சரித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகி வருவதாக தகவல் கசிந்த நிலையில், அவசர கோப்ரா நெருக்கடி கூட்டத்தை பிரதமர் ஸ்டார்மர் புதன்கிழமை முன்னெடுத்தார்.
15 டன் எடைகொண்ட
கடந்த 48 மணி நேரமாக இஸ்ரேல் - ஈரான் மோதல் விவகாரத்தில் ட்ரம்ப் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவே கூறப்படுகிறது. மேலும் வெளியான தகவலின் அடிப்படையில், ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி மேம்பாட்டுப் பகுதியை முதலில் தாக்க அமெரிக்கா தெரிவு செய்யலாம் என்றே கூறப்படுகிறது.
அப்படியான தாக்குதல் ஒன்றை அமெரிக்காவால் மட்டுமே முன்னெடுக்க முடியும் என கூறப்படுகிறது. இதற்கென 15 டன் எடைகொண்ட மிகப்பெரிய வெடிகுண்டு ஒன்றை அமெரிக்கா பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவால் மட்டுமே இப்படியான தாக்குதலை முன்னெடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அதனால் தாம் தாக்குதலை முன்னெடுக்க இருப்பதாக பொருளல்ல என்றும் குழப்பியுள்ளார்.
அடுத்த 24 முதல் 48 மணி நேரம் இஸ்ரேல் - ஈரான் விவகாரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றே அமெரிக்க அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |