பெண் ஒரு மென்மையான மலர்; இந்தியாவை பற்றி தெரியாது - போர் சூழலில் வைரலாகும் காமேனியின் பதிவுகள்
ஈரான் உச்சத்தலைவர் காமேனியின் பழைய பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஈரான் இஸ்ரேல் போர்
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, கடந்த 13 ஆம் திகதி, இஸ்ரேல் அதன் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானும் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், இரு நாடுகளுக்குமிடையே போர் வெடித்துள்ளது.
இந்த போரில், ஈரானின் உச்சத்தலைவர் காமேனியை கொன்று விடுவோம் என இஸ்ரேல் மிரட்டல் விடுத்து வருகிறது.
காமேனியின் இருப்பிடம் எங்களுக்கு தெரியும். அவர் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தெரிவித்துள்ளார்.
ஆனால், சரணடையும் பேச்சுக்கே இடமில்லை. ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் தண்டிக்கப்படும். அமெரிக்கா தலையிட்டால் பெரும் சேதாரத்தை சந்திக்கும் என பதிலடி கொடுத்துள்ளார் காமேனி.
பெண் ஒரு மலர்
இந்நிலையில், பெண்கள் மற்றும் கறுப்பினத்தவர் உரிமை, இந்தியா குறித்த காமேனியின் பழைய எக்ஸ் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2013 ஆம் ஆண்டு வெளியிட்ட பதிவில், "பெண்ணின் தேவைகளையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு ஆணுக்கு உள்ளது. மேலும் அவர்களுடைய உணர்ச்சி நிலையைப் பற்றி அலட்சியமாக இருக்கக்கூடாது" என தெரிவித்துள்ளார்.
Man has a responsibility to understand #woman’s needs and feelings and must not be neglectful toward her #emotional state
— Khamenei.ir (@khamenei_ir) September 15, 2013
மேலும், "பெண் ஒரு மென்மையான மலர், வீட்டு வேலைக்காரி அல்ல. ஒரு பெண்ணை வீட்டில் ஒரு பூவைப் போல நடத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Born to be a lover, forced to be the supreme leader https://t.co/HMWmPtF1iN
— Ahad|| (@yeagerexcelency) June 19, 2025
கறுப்பினத்தவர் உரிமை தொடர்பான பதிவில், அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான ஒரு நாளை அவர்கள் கொண்டாடுகிறார்கள், ஆனால் இதுபோன்ற குற்றங்கள் கறுப்பின மக்களுக்கு எதிராக செய்யப்படுகின்றன" என அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
They celebrate a day for abolition of slavery but such crimes are committed against the blacks. #EricGarner #TrayvonMartin #BlackLivesMatter
— Khamenei.ir (@khamenei_ir) April 26, 2015
இந்தியா
தனது பள்ளிப்பருவம் குறித்து வெளியிட பதிவில், "நான் முதல் நாளிலிருந்தே ஒரு சிறப்பு மேலங்கியை அணிந்துகொண்டு பள்ளிக்குச் சென்றேன். மற்ற குழந்தைகள் முன் அதை அணிவது சங்கடமாக இருந்தது, ஆனால் குறும்புத்தனமாகவும் விளையாட்டுத்தனமாகவும் இருந்து அதை ஈடுகட்ட முயற்சித்தேன்" என தெரிவித்துள்ளார்.
I went 2school w/a cloak since1st days;it was uncomfortable 2wear it in front f other kids,but I tried 2make up 4it by being naughty&playful
— Khamenei.ir (@khamenei_ir) September 24, 2013
இன்னொரு பதிவில், "நான் சினிமா பார்ப்பதில்லை. ஆனால் கவிதை மற்றும் நாவல் வாசிப்பில் நான் வழக்கமான வாசகர் இல்லை. தீவிர வாசகர்" என தெரிவித்துள்ளார்.
I'm not into cinema and visual arts but when it comes to poetry and novels, I'm not just a typical audience. #Books #AvidReader
— Khamenei.ir (@khamenei_ir) February 25, 2015
மற்றொரு பதிவில், "நேருவின் 'உலக வரலாற்றின் பார்வைகள்' என்னும் புத்தகத்தைபடிக்கும் முன், காலனித்துவத்திற்கு முன்பு பல முக்கியமான முன்னேற்றங்களை இந்தியா சந்தித்தது எனக்குத் தெரியாது" என தெரிவித்துள்ளார்.
Before studying "Glimpses of World History" by Mr. #Nehru I didn't know #India before colonization had undergone so many important #advances
— Khamenei.ir (@khamenei_ir) August 6, 2013
86 வயதான காமேனியை, ஈரானின் மூத்த மத குரு மட்டுமே என நினைத்து தவறு என நெட்டிசன்கள் அவரை குறித்து விவாதித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |