ரஷ்யாவுடன் இணைந்து... அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான்
அமெரிக்க தாக்குதல் விவகாரத்தில் ரஷ்யாவுடன் ஒருங்கிணைந்து செயல்பட இருப்பதாக கூறியுள்ள ஈரான், கடுமையான விளைவுகளை எதிர்பார்க்க வேண்டும் என்றும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
படுகொலை செய்தேனும்
அமெரிக்காவின் குண்டுவீச்சு என்பது 1979ல் வெடித்த புரட்சிக்கு பின்னர் ஈரான் எதிர்கொண்ட மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் உதவி கோருவதற்காக ஈரானின் உயர் தலைவர் காமெனி தனது வெளிவிவகார அமைச்சரை திங்களன்று மாஸ்கோவிற்கு அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் காமெனியை படுகொலை செய்தேனும் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர வெளிப்படையாக கூறிவரும் நிலையில், அப்படியான முடிவு மத்திய கிழக்கை படுகுழியில் மூழ்கடித்துவிடும் என்று ரஷ்யா அஞ்சுகிறது.
இஸ்ரேல் தாக்குதல்களை கடுமையாக விமர்சித்துள்ள விளாடிமிர் புடின் இதுவரை ஈரான் மீதான அமெரிக்காவின் குண்டுவீச்சை கண்டிக்கவில்லை. பிராந்தியத்தில் அமைதி திரும்ப வேண்டும் என கடந்த வாரம் அழைப்பு விடுத்துள்ள புடின், ஈரானின் அணுசக்தி திட்டத்தில் ஒரு மத்தியஸ்தராக மாஸ்கோ சேவை செய்யவும் தயார் என அறிவித்திருந்தார்.
வெளிவரும் தகவலின் அடிப்படையில், ரஷ்ய ஜனாதிபதிக்கு தனிப்பட்ட கடிதம் ஒன்றையும் காமெனி தமது வெளிவிவகார அமைச்சரிடம் கொடுத்தனுப்பியதாக கூறப்படுகிறது. அதில் அவர் இக்கட்டான நேரத்தில் ரஷ்யாவின் உதவியைக் கோரியிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.
ஈரானும் ரஷ்யாவும்
ரஷ்யாவின் இதுவரையான நடவடிக்கைகளில் ஈரான் திருப்தியாக இல்லை என்றும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா விவகாரத்தில் ரஷ்யா தீவிரம் காட்ட வேண்டும் என்றும் ஈரான் கோரி வருகிறது. புடின் மற்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.
ஆனால் ஈரானின் வெளிவிவகார அமைச்சர் Araqchi தெரிவிக்கையில், மத்திய கிழக்கில் தற்போதைய பதற்றம் குறித்து ஈரானும் ரஷ்யாவும் தங்கள் நிலைப்பாடுகளை ஒருங்கிணைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
காமெனியை கொல்லும் முடிவுக்கு ரஷ்யா எந்த காலத்திலும் ஒப்புதல் அளிக்காது என்றும், அப்படியான ஒரு பேச்சுகிற்கே இடமில்லை என்றும் புடின் கடந்த வாரம் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
உக்ரைன் விவகாரத்தில் ட்ரம்பின் முடிவுகளை ஏற்க மறுத்த ஜெலென்ஸ்கிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்த ட்ரம்ப் நிர்வாகம், கடைசியில் உக்ரைனில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.
மட்டுமின்றி, போரைத் தொடங்கிய ரஷ்யாவை ஆதரிப்பதுடன், உக்ரைனுக்கு தொடர்ந்து அழுத்தமளித்தும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |