இஸ்ரேல் தண்டிக்கப்படுகிறது..! ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அறிவிப்பு
இஸ்ரேல் தற்போது தண்டிக்கப்படுவதாக ஈரானின் உச்ச தலைவர் தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
ஈரான் தலைவர் கொல்லப்பட வேண்டும்!
டெல் அவிவ் அருகே மருத்துவமனை ஒன்றில் ஈரான் ஏவுகணைத் தாக்கியதை அடுத்து கொந்தளித்துப் போன இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஈரானின் ஆயத்துல்லா காமெனியை உயிருடன் விடுவதாக இல்லை என அறிவித்தார்.
இஸ்ரேல் தரப்பில் வந்த இந்த கருத்துக்கு பல்வேறு உலக நாடுகளிடம் இருந்தும் பெரும் எதிர்ப்பு கருத்துக்கள் கிளம்பியுள்ளன.
இஸ்ரேல் தண்டிக்கப்படுகிறது!
இந்நிலையில், சமீபத்திய சமூக ஊடக பதிவில், ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் தற்போது "தண்டிக்கப்படுகிறது" என்று அறிவித்துள்ளார்.
The Zionist enemy is being punished. It is being punished right now.
— Khamenei.ir (@khamenei_ir) June 20, 2025
கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் பகிரப்பட்ட இந்தச் செய்தி, ஈரான் இஸ்ரேல் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதை சூசகமாக உணர்த்துவதாகத் தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |