ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தை பழுதுபார்க்க பில்லியன் கணக்கில் செலவாகும் என கூறப்படுகிறது.
பிப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து பல தாக்குதல்கள் ஈரான் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல்களின் விளைவாக ஏற்பட்ட சேதம், ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட தகவல்களை விட மிகக் கடுமையானது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் முக்கிய இராணுவ தளங்கள், ஆயுத களஞ்சியங்கள், கட்டளை மையங்கள், விமான ஹேங்கர்கள், செயற்கைக்கோள் தொடர்பு அமைப்புகள் உள்ளிட்டவை தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், ரன்வேக்கள், ரேடார் அமைப்புகள், சில விமானங்களும் சேதமடைந்துள்ளன. இவை அனைத்தும் இராணுவ இயக்கம் மற்றும் கண்காணிப்புக்கு அத்தியாவசியமானவை.
அமெரிக்காவின் வலுவான பாதுகாப்பு அமைப்புகளை மீறி, பழைய ஈரான் F-5 போர் விமானம் கூட தாக்குதல் நடத்த முடிந்தது. இதனால் அமெரிக்காவின் பாதுகாப்பு திறன்கள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த தாக்குதல்களின் பழுது பார்க்கும் செலவு பில்லியன் டொலர்களை எட்டும் என மதிப்பிடப்படுகிறது.
ஆனால், அமெரிக்க பாதுகாப்புத் துறை முழுமையான சேத விவரங்களை வெளியிடவில்லை. இதனால் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
போர் தொடங்கிய முதல் வாரத்திலேயே அமெரிக்கா 11 பில்லியன் டொலர் செலவிட்டுள்ளது. தற்போது, பெண்டகன் 200 பில்லியன் டொலர் கூடுதல் நிதி கோரியுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு பட்ஜெட் ஏற்கனவே 838.5 பில்லியன் தோழராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள், அமெரிக்கா-ஈரான் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளதை வெளிப்படுத்துகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#IranStrikes #USBases #MiddleEastConflict #Pentagon #USIranWar #DefenseBudget #BreakingNews